‘உலக அழகி ‘நடிகை ஐஸ்வர்யா ராய் இவரைப் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் இவர் பிரபலமானவர். நடிகை ஐஸ்வர்யா ராய்-க்கும், நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் 2007ல் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் 2011ல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆராத்யா என்று பெயர் வைத்தனர்.
அமிதாப்பச்சனின் பேத்தியும், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் மகளான ஆராத்யபச்சனுக்கு தற்பொழுது 12 வயது ஆகிறது. தற்பொழுது சோசியல் மீடியாவில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் பிரிந்து விட்டதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதுகுறித்த உண்மை தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
தற்பொழுது இவர் மும்பையில் உள்ள திருபானி அம்பானி சர்வதேச பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நடிகை ஐஸ்வர்யா ராய் மகளான ஆராத்யா தனது அம்மாவுடன் அடிக்கடி சினிமா விழாக்களிலும் குழந்தையாக இருக்கும் பொழுதிலிருந்தே கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் நடந்து முடிந்த முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா pre wedding விழாவில் தனது அம்மா ஐஸ்வர்யா ராய் மற்றும் அப்பா அமிதாப் பச்சன் அவர்களுடன் கலந்து கொண்டார். தற்பொழுது இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக இதை பார்த்த நெட்டிசன்கள் ‘அழகில் அம்மாவையே மிஞ்சிட்டாங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.