![j 1 - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/06/j-1-1.jpg)
CINEMA
சம்பளம் வாங்காமல் நடித்த நடிகர்கள்.. தனுசுக்காக நயன்தாரா பண்ணது தான் மிகப்பெரிய விஷயம்..!!
இந்த காலகட்டத்தில் நடிகர்கள் ஒரு சின்ன விளம்பரத்தில் நடித்தால் கூட அதற்கு பெரிய தொகையை சம்பளமாக வாங்குகிறார்கள். ஆனால் சம்பளம் வாங்காமல் தங்களுக்கான கதாபாத்திரத்தை நடித்துக் கொடுத்த நடிகர் நடிகைகளை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். முதலாவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா திரைப்படத்தில் சரத்குமார் திருநங்கையாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்த படத்தில் நடிக்க சரத்குமார் சம்பளம் வாங்கவில்லையாம்.
அடுத்ததாக ஸ்ரீதேவி நடிப்பில் இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அஜித் கேமியா ரோலில் நடித்தார். ஸ்ரீதேவி கேட்டுக்கொண்டதற்காக அஜித் அந்த ரோலை நடித்துக் கொடுத்துள்ளார். இதற்காக அஜித் சம்பளம் வாங்கவில்லையாம். முக்கியமாக எதிர்நீச்சல் படத்தில் தனுஷ் கேட்டுக் கொண்டதற்காக நயன்தாரா ஒரு ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடினார்.
சினிமாவில் பிரபல நடிகைகளை பொறுத்தவரை படங்கள் தவிர்த்து மற்ற பாடலுக்கு ஆடியனாலோ, ஒரு சில கதாபாத்திரத்தில் நடித்தாலோ மார்க்கெட் பறிபோய்விடும் என்ற அச்சம் இருக்கும். அப்படி இருக்க துணிச்சலாக முடிவு எடுத்து நயன்தாரா தனுசுக்காக எதிர்நீச்சல் படத்தில் இடம்பெற்ற அந்த பாடலுக்கு டான்ஸ் ஆடினார். அதற்காக நயன்தாரா சம்பளம் வாங்கவில்லை. ஹேராம் படத்தில் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டதற்காக ஷாருக்கான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஷாருக்கான் சம்பளம் வாங்கவில்லை. கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா அந்த மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதில் நடிப்பதற்கு சூர்யா சம்பளம் வாங்கவில்லை. அடுத்ததாக விஜய் சினிமாக்கு வந்த காலகட்டத்தில் செந்தூரபாண்டி படத்தில் நடித்தார். அவரது மார்க்கெட்டை உயர்த்தும் பொருட்டு விஜயகாந்த் கேமியா ரோலில் நடித்து கொடுத்தார்.
அந்த ரோலுக்கு விஜயகாந்த் சம்பளமே வாங்க வில்லையாம். சில நடிகர்கள் தாங்கள் நடித்த படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்படும் போது சம்பளம் வேண்டாம் என கூறிவிடுகின்றனர். அந்த வகையில் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது சிவகார்த்திகேயன் தனக்கு சம்பளமே வேண்டாம் என கூறிவிட்டாராம். திரையுலகில் தங்களது நட்புக்காகவும், அன்பிற்காகவும் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்த ஏராளமான நடிகர்கள் இன்னும் இருக்கின்றனர்.