தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர்தான் விஷ்ணு விஷால். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய விஷ்ணு விஷால் நல்ல நடிகர் என்ற பெயரையும் பெற்றார். அவரைத் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்த நிலையில் பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், இன்று நேற்று நாளை, நீர்ப்பறவை மற்றும் முண்டாசுப்பட்டி உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் நடித்த அனைத்து திரைப்படமும் ஒவ்வொரு ஜானரில் வெளியானது. இதனால் அவருடைய கதை தேர்வு அபாரமாக இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு இருந்தது.
குறிப்பாக சீது ராமசாமி இயக்கிய நீர்ப்பறவை படத்தில் விஷ்ணு விஷாலின் நடிப்பை பாராட்டாதவர்கள் யாருமே கிடையாது. இருந்தாலும் அந்த திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. பிறகு மனம் தளராத விஷ்ணு விஷால் தனது கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்து இன்று நேற்று நாளை திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் லால் சலாம் .
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நிலையில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து விக்ராந்த் நடித்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினி கெஸ்ட் ரோல் செய்து இருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் லால் சலாம் படப்பிடிப்பின் போது விஷ்ணு விஷால் செய்த ஒரு செயல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது லால் சலாம் படப்பிடிப்பின் போது விஷ்ணு விஷால் ஷூட்டிங் ஸ்பாட் இருக்கு வரும்போது தன்னுடன் 18 பேரை பாதுகாப்புக்காக அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால் அங்கு சென்று பார்த்த போது ரஜினி தன்னுடன் இரண்டு பேரை மட்டுமே அழைத்து வந்துள்ளார். இதனைப் பார்த்து செய்வதறியாமல் திகைத்தால் விஷ்ணு விஷால் 16 பேரை திரும்பி வீட்டுக்கு அனுப்பி வைத்தார். தயாரிப்பாளருக்கு தேவையில்லாத செலவை வைக்கும் வகையில் விஷ்ணு விஷால் இந்த செயலை செய்ததாக பிரபல யூட்யூபில் ஒருவர் வஞ்சித்துள்ளார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியே இரண்டு பேரை அழைத்து வரும்போது விஷ்ணு விஷால் இவ்வாறு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் கூறியுள்ளார்.
பொதுவாக வீடுகளுக்கு 14.20 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது புதிதாக 10…
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சிவா மற்றும் அவர்களது நண்பர் ஆகியோர் சேர்ந்து, 40 வயதுடைய பெண்…
சீனாவின் காசு மாநிலம் லின்சியா நகரில் கட்டிடங்களுக்கு இடையே உள்ள குறுகிய மற்றும் ஆழமான இடைவெளியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டியை…
மும்பை நகரில் சுற்றுலா வந்த தெலுங்காவைச் சேர்ந்த நபர் ஒருவர், இரண்டு பேரால் தாக்கப்பட்டுக் மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் இந்தாபூர் பகுதியில் நிலத்தகராறு காரணமாக இரண்டு மகன்கள் தங்கள் வயதான தாய்லாந்தையும் தந்தையையும் கட்டையால்…
தற்காலத்தில் சில இளைஞர்கள் இருசக்கர வாகன ஓட்டுதலை ஒரு சாதாரணப் பயணமாகப் பார்க்காமல், ஆபத்தான சாகசங்களை அரங்கேற்றும் தளமாக மாற்றிக்…