தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் தற்போது ரத்னம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்து வருகிறார். தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு மூன்றாவது முறையாக விஷால், ஹரி கூட்டணி இணைந்துள்ளது.
இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, யோகிபாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். வருகிற ஏப்ரல் 26 அன்று ரத்னம் திரைப்படம் ரிலீசாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்பொழுது ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படத்தின் புரமோஷன் வேலைகளில் நடிகர் விஷால் தீவிரமாக இறங்கியுள்ளார். மேலும் ரத்னம் படம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பும் சமீபத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பேசிய அவர், ‘சின்ன திரைப்படங்களுக்கு நான் சொல்ற ஒரே விஷயம். நீங்க ஏன் என்ன கேக்குறீங்க..? தோனியை போய் கேளுங்க. அவர் சிக்சர் அடிக்கும்போது நம்ம விசில் அடிக்கிறோம்ல. அவரும் ஒரு படம் எடுத்தாரு. அவர் கிட்ட மைக் நீட்டி கேளுங்களேன்.
எவ்ளோ திரும்ப வந்ததுன்னு. நீங்க கேளுங்க..? உங்களுக்கு அந்த பதில் வரும். ஏன் என்ன கேக்குறீங்க..? நானும் சின்ன படங்கள் எடுத்து இருக்கேன். ‘ஜீவா’ -ன்ற சின்ன திரைப்படம் எடுத்தேன். அப்போ ஜெயலலிதா அம்மா அரெஸ்ட் ஆனாங்க. அதனால எல்லா திரையரங்கத்தையும் மூடுங்கன்னு சொன்னாங்க. போச்சு எனக்கு அப்படியே 4 கோடி, 5 கோடி போச்சு’ என்று டென்ஷனாக பேசியிருந்தார் விஷால். இதோ அந்த வீடியோ…
நடிகை சாக்ஷி அகர்வால் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் கிராமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை சாக்ஷி அகர்வால் ராஜா…
மே 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகப் போகும் கன்னி படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் பிரபலங்கள் விவாகரத்து செய்து கொள்வதை…
பிரபல நடிகை சாயா சிங் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அவரது வீட்டில் வேலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது…
பிரபல நடிகையான வரலட்சுமி தனது காதலர் நிக்கோலய் சச்தேவுடன் திருமணத்திற்கு முன்பே அவுட்டிங், டேட்டிங் என்று விடுமுறையை கழித்துக் கொண்டிருக்கும்…
இசையமைப்பாளரும் பாடகருமான ஜிவி பிரகாஷ் அவரது மனைவி சைந்தவியை பிரிவதாக நேற்று முன்தினம் சமூக வலைதள பக்கங்களில் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.…
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒன்றே ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உண்டு. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு நடிகர் கோலோச்சுவார்.…