தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த வாரிசு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்பொழுது அக்டோபர் 19 ஆம் தேதி தளபதி நடிப்பில் லியோ திரைப்படம் ரிலீஸாக உள்ளது. இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தளபதி விஜயைக் கொண்டு திரையுலகில் கால் பதித்தவர் நடிகர் விக்ராந்த்.
இவர் தமிழ் சினிமாவில் கசட தபர என்னும் படம் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். ஒரு சில படங்கள் மட்டுமே இவர் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான பக்ரீத் திரைப்படம் நினைத்த அளவுக்கு வெற்றியை தேடி தரவில்லை. முத்துக்கு முத்தாக திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற சர்வைவர் என்னும் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இவருக்கென்று ஒரு தனி தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிக்கும் எந்த கதாபத்திரமாக இருந்தாலும் அதை மக்கள் மனதில் ஆழ பதிய செய்வார். தற்பொழுது வரை தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள தற்பொழுது வரை திரையுலகில் போராடி வருகிறார்.
தற்பொழுது இவர் பல திரைப்படங்களை கைவசம் வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வருகிறார். நடிகர் விக்ராந்த்துக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் விக்ராந்தின் மனைவி. இவர் தற்பொழுது துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கடலில் கார் போன்ற எந்திர படகை ஓட்டும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…