‘நீ கிடைத்தது எனக்கு வரம்’…! காதல் மனைவிக்கு கவிதைகளால் வாழ்த்து கூறி பதிவு வெளியிட்ட நடிகர் விக்ரம் பிரபு…!

By Begam

Published on:

மறைந்த நடிகர் சிவாஜியின் இளைய மகன் நடிகர் பிரபு. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தார். ‘கன்னக்குழி அழகர்’ என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படுகிறார். தமிழ் சினிமாவில் மூன்று தலைமுறையாக பிரபலமாக இருக்கும் குடும்பத்தில் ஒன்று நடிகர் பிரபுவின் குடும்பம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடங்கி, அவரது மகன் பிரபு தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த காலம் போய், தற்போது அவரது மகன் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களிள் ஒருவராக உள்ளார்.

   

நடிகர் பிரபு ‘சங்கிலி’ திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார் .பி. வாசுவின் இயக்கத்தில் வெளியான ‘சின்னத்தம்பி’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை பெற்றார். தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியாகவிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் பிரபு புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர் .

தனது மகன் விக்ரம் பிரபுவிற்கு ‘லட்சுமி’ என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் முடித்து வைத்தனர்.  இவர்களுக்கு தற்பொழுது குழந்தைகள் உள்ளனர். நடிகர் விக்ரம் பிரபுவும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்பொழுதும் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் விக்ரம் பிரபு. இவர் தற்பொழுது தனது மனைவியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இப்பதிவினை பார்த்த ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Vikram Prabhu (@iamvikramprabhu)

author avatar