Connect with us

அடடே.. பெயர்களை எல்லாம் தேர்ந்தெடுத்து சொல்லிருக்காரே.. வைரலாகும் நடிகர் விஜயின் நன்றி அறிக்கை..!

CINEMA

அடடே.. பெயர்களை எல்லாம் தேர்ந்தெடுத்து சொல்லிருக்காரே.. வைரலாகும் நடிகர் விஜயின் நன்றி அறிக்கை..!

 

தனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நேற்று முன்தினம் தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு ஏகப்பட்ட பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகுக்கு கதாநாயகனாக அறிமுகமான இவர் பல வருடங்கள் பல சூப்பர் சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து மக்களை மகிழ்வித்து இருக்கின்றார்.

   

தமிழ் சினிமாவில் மட்டும் இதுவரை 68 திரைப்படங்களில் நடித்து முடித்து இருக்கின்றார் நடிகர் விஜய் இதில் பல திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டுதான். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இதை தொடர்ந்து அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு சினிமாவை விட்டு விலக இருக்கின்றார்.

அதற்கு காரணம் அவர் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சிதான் வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போகும் நடிகர் விஜய் அதற்கான என்ன ஏற்பாடுகளையும் செய்து வருகின்றார். மேலும் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு உதவித் தொகையும், சான்றுகளும் இரண்டு கட்டமாக வழங்க இருக்கின்றார்.

இந்நிலையில் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஒரு அறிக்கையை இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். அதில் எனது பிறந்தநாளுக்கு தொலைபேசி வாயிலாகவும், சமூக ஊடக தளங்கள் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

பின்னர்  அவருக்கு யார் யாரெல்லாம், அதாவது எந்தெந்த அரசியல் தலைவர்கள் எல்லாம் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்களோ அவர்களின் பெயர்களை, அவர்கள் கட்சியின் பெயரோடு சேர்த்து விரிவாக எழுதி நன்றி தெரிவித்திருக்கின்றார். இந்த அறிக்கை தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Cineulagam (@cineulagamweb)

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top