சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். போது அவர் மேடையில் பேசியதாவது, கவுண்டமணி சாருடன் நடித்த எல்லோரையும் நான் மிகச் சிறந்த நடிகர்களாக தான் பார்க்கிறேன். ஏனென்றால் அந்த காலத்தில் டிஜிட்டல் எல்லாம் இல்லை. கேமராவில் பிலிம் ரோல்தான். அப்படி இருக்கும் போது எப்படி அவர்கள் எல்லாம் கவுண்டமணியுடன் சிரிக்காமல் நடித்தார்கள் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
கவுண்டமணியுடன் நடிக்கும் காட்சிகளில் நானாக இருந்தால் அன்னைக்கு முழுவதும் அந்த சீனை எடுக்கவே முடியாது. நாள் முழுவதும் சிரிச்சுக்கிட்டே இருந்திருப்பேன். எனக்கு கவுண்டமணி சாரை அவ்வளவு பிடிக்கும். அவருடைய காமெடி பாத்துட்டு மத்தவங்க காமெடி பார்த்தால் சிரிப்பே வர மாட்டேங்குது என்று விஜய் சேதுபதி நடிகர் கவுண்டமணி நடிப்பு குறித்து பேசியிருக்கிறார்.
