தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 69 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். பின்னர் முழு நேரமும் அரசியலில் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை தொடங்கியிருக்கும் விஜய் இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. வருகிற சட்டமன்றத் தேர்தலில் கட்டாயம் இவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள். காலை முதலே பல பிரபலங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கினை செலுத்தி வருகிறார்கள். இவர் ஓட்டு போட வருவார் என்பதை எதிர்பார்த்து ஒட்டுமொத்த மீடியாவும் காத்திருந்தது என்று தான் கூற வேண்டும்.
இந்நிலையில் இன்று விமான நிலையத்திற்கு வந்த விஜய் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேராக நீலாங்கரையில் இருக்கும் வேல்ஸ் ஸ்கூலுக்கு வெள்ளை சட்டை அணிந்து வந்த விஜய் வாக்கு சாவடிக்கு சென்று தனது வாக்கினை செலுத்தி இருக்கின்றார். ஓட்டு போட வந்த அவரை காரில் இருந்து கூட இறங்கவிடாமல் பொதுமக்கள் ஆர்ப்பரித்தனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக நடிகர் விஜய் தனது வாக்கினை செலுத்தி விட்டு சென்றார்.