Connect with us

விஜய் பிறந்தநாளில் விழாவில் விபரீதம்.. சிறுவனின் கையில் கொழுந்துவிட்டு எறிந்த தீ.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

CINEMA

விஜய் பிறந்தநாளில் விழாவில் விபரீதம்.. சிறுவனின் கையில் கொழுந்துவிட்டு எறிந்த தீ.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

 

விஜயின் பிறந்தநாள் கொண்டாட்ட விழாவின்போது சிறுவனின் உடலில் தீப்பற்றிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவரின் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவார்கள். இவரின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும். அதனாலேயே நீ நான் என போட்டி போட்டுக் கொண்டு இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் விஜய்யை வைத்து படம் இயக்க முயற்சி செய்வார்கள். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார்.

   

இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை தொடங்கியிருக்கின்றார். வருகிற சட்டசபை தேர்தலில் அந்த கட்சி சார்பாக போட்டியிட இருக்கின்றார். இந்நிலையில் இன்று விஜய் தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார்.

கள்ளக்குறிச்சியில் நேர்ந்த கள்ளச்சாராய மரணம் சம்பவம் காரணமாக தனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக கள்ளச்சாராயம் சாப்பிட்டு உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில் விஜயின் ரசிகர்கள் விஜயின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ஒரு சாகச முயற்சி எடுத்திருக்கிறார்கள். அது விபரீதமாக முடிவடைந்துள்ளது.

சென்னை அடுத்த நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் விஜய் ரசிகர்கள் சார்பாக பிறந்தநாள் கொண்டாட்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் ஒரு சிறுவன் கையில் தீயிட்டு கொளுத்தி ஓடுகளை உடைக்கும் சாகசம் முயற்சியை முயற்சி செய்தார்கள். அதன்படி சிறுவனின் கையில் பெட்ரோலை ஊற்றி தீயிட்டுள்ளனர். தொடர்ந்து ஓட்டை அந்த சிறுவன் உடைத்த பிறகும் அந்த தீ அணையவில்லை.

மேலும் அது அருகில் இருந்தவர்களின் மீதும் தீயை ஏற்படுத்தியது. பயிற்சியாளரின் கையில் இருந்த பிளாஸ்டிக் பாட்டில் குலுங்க அதிலிருந்து பெட்ரோல் அருகில் இருந்த சிறுவன் மீது விழுந்ததால் தீ கொழுந்து விட்டு எறிய தொடங்கியது. அங்கிருந்தவர்கள் உடனே சுதாரித்துக் கொண்டு தீயை அழைத்தனர். மேலும் காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. விஜய் ஏற்கனவே எந்த கொண்டாட்டமும் வேண்டாம் என்று கூறியிருந்த நிலையில் விஜய் ரசிகர் மன்ற தலைவர் ஈசிஆர் சரவணன் ஏற்பாட்டில் தான் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top