அண்மையில் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்ற நடிகர் வடிவேலு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
தமிழ் திரைப்படத்துறையில் ‘வைகைப்புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள் தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர். ஃப்ரெண்ட்ஸ், வின்னர், சச்சின், சந்திரமுகி, மருதமலை, கிரி போன்ற எண்ணற்ற படங்கள் இவர் நடிப்பில் வெளியாகின.
தனக்கென்று தனி பாணியை நகைச்சுவையில் ஏற்படுத்திக் கொண்டவர். 1991 இல்’ என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தில் முதன் முதலாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார் . இப்படத்தில் அவர் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார். ‘போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது.
தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த வந்த இவர் தற்பொழுது நாய் சேகர் ரிட்டன்ஸ், சந்திரமுகி 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். கோவிலில் சாமி தரிசனத்திற்கு சென்ற இவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.பேட்டியில் நிருபர் ஒருவர் நீங்கள் அரசியலுக்கு மீண்டும் வருவீர்களா? என்று கேட்டதற்கு, ‘அரசியலுக்கு இனி நான் வரப்போவதில்லை’ என்று அவர் பதில் அளித்துள்ளார்.
திரைத் துறையில் இருந்து கொண்டு சமூக பணி ஆற்ற போவதாகவும், நடிகர் போண்டாமணிக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் சுற்றி இருந்த நபர்களை பார்த்து ஒரே வயிறா முட்டுது கொஞ்சம் தள்ளி நில்லுங்க என்று தனக்கே உரிய நக்கலான பாணியில் கூறியுள்ளார். தற்பொழுது இந்த பேட்டி இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகர்களின் பட்டியலில் அதிகம் பேசப்பட்டவர்களில் ஒருவர் ஜெய். பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்ததன் மூலம் திரையுலகில்…
இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து உலகிலேயே எந்தவொரு இசையமைப்பாளரும் படைக்காத சாதனையை நிகழ்த்தி தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில்…
தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக்…
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் கவின். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் நிகழ்ச்சியின்…
நடிகை காத்ரீன் திரீசா, மாடலிங் துறையில் அனுபவம் உள்ள இவர் shankar IPS என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவுக்கு…
'முந்தானை முடிச்சு' படத்தில் குழந்தையாக வந்தவர் தான் நடிகை சுஜிதா. இதனை தொடர்ந்து சிறுவனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்…