2 நாளா ஒண்ணுமே இல்லாம தவிச்சிட்டு இருக்கோம்.. சோசியல் மீடியா மூலம் உதவி கேட்ட விஜய் டிவி பிரபலம்…

By Begam

Updated on:

சென்னையில் மிக்ஜாம் புயலின்   தாக்கத்தால் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தற்பொழுது சென்னையே வெள்ளக்காடாக மாறியுள்ளது. பல்வேறு பகுதிகளில் மழை நீர் கடல் போல் தேங்கியுள்ளது. பெரும்பாலான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.  மின்சாரமும் துண்டிக்கப்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

   

மக்களின்  இயல்பு வாழ்க்கையை இந்த புயல் பெரிதும் பாதித்துள்ளது. கரண்ட் இல்லாமல், சாப்பிட குடிக்க தண்ணீர் இல்லாமல், உணவு கூட கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இது மட்டுமின்றி மழை நீர் அனைத்து தெருக்களிலும்,  சாலைகளிலும் குளங்கள் போல காட்சி அளித்து வருகிறது.

பல்வேறு வீடுகளிலும் இடுப்பு அளவிற்கு மழைநீர் தேங்கி  நிற்பதை நாம் பார்த்து வருகிறோம். சாதாரண மக்களுக்குத்தான் இந்த நிலைமை என்றால், பிரபலங்களும் இதில் சிக்கியுள்ளனர். விஜய் தொலைக்காட்சி பிரபலமான ‘கலக்கப்போவது யாரு’ TSK உம் இந்த வெள்ளத்தில் சிக்கியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டு உதவி கேட்டுள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘ Fully flooded in Valasaravakkam , Radha nagar 2nd street, No current here .. no network here .. around 40 family were affected so pls kindly take some action to clear flood here’ என்று கூறியுள்ளார்.

அதாவது, ‘ வளசரவாக்கம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளதாகவும், 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு கரண்ட் இல்லாமல் சிக்கித் தவிப்பதாகவும்’ உதவி கேட்டுள்ளார். இதோ அவரின் பதிவு…