Connect with us

கோலாகலமாக நடந்த திருமணம்.. ஆனால் தம்பி ராமையா மருமகளுக்கு போட்ட கண்டிஷன்.. மறுப்பு சொல்லாத அர்ஜுன் குடும்பம்..!

CINEMA

கோலாகலமாக நடந்த திருமணம்.. ஆனால் தம்பி ராமையா மருமகளுக்கு போட்ட கண்டிஷன்.. மறுப்பு சொல்லாத அர்ஜுன் குடும்பம்..!

 

நடிகர் அர்ஜுன் மகள் மற்றும் தம்பி ராமையாவின் மகன் திருமணம் நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் மருமகள் ஐஸ்வர்யாவுக்கு தம்பி ராமையா ஒரு கண்டிஷன் போட்டுள்ளாராம். இது குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

   

தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்ற பெயருடன் வலம் வருபவர் நடிகர் அர்ஜுன். 90களில் தனது ஆக்ஷன் காட்சிகளால் ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். லியோ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த இவர் தற்போது அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்திலும் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது .

அர்ஜுன் மகளான ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தம்பிராமையாவின் மகனான உமாபதிக்கும் திருமணம் என்ற தகவல் வெளியானது. ஜூன் 10ஆம் தேதி இவர்கள் இருவரின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த திருமணத்தில் தம்பி ராமையாவின் நெருங்கிய சொந்தத்தினரும் அர்ஜுனனின் நெருங்கிய சொந்தத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

ஏற்கனவே இவர்களின் நிச்சயதார்த்தமும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிலையில் திருமணமும் மிக எளிமையாக நடைபெற்று முடிந்தது. அதாவது நடிகர் அர்ஜுன் கெருகம்பாக்கத்தில் சொந்தமாக கட்டி இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் தான் இவர்களது திருமணம் நடைபெற்ற முடிந்தது.

இதில் நடிகர் விஷால், சமுத்திரக்கனி, விஜயகுமார், கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட சில திரைபிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றார்கள். அர்ஜுனின் மகள் திருமணம் என்ற உடன் அனைவரது பேச்சும் பார்வையும் தற்போது அவர்களின் திருமணத்தைப் பற்றி தான் இருக்கின்றது. இரு விட்டாலும் சம்மதித்து திருமணம் நடைபெற்றாலும் நடிகர் தம்பிராமையா அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கு ஒரு கண்டிஷன் போட்டு இருக்கின்றாராம்.

அந்த கண்டிஷனுக்கு ஐஸ்வர்யாவும் அர்ஜுன் விட்டாலும் சம்மதம் தெரிவித்த பிறகு தான் தம்பி ராமையா திருமணத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்பட்டது. தம்பி ராமையா தன்னை வளர்த்து விட்ட சினிமா துறையில் தனது மருமகள் ஐஸ்வர்யா இனிமேல் நடிக்க கூடாது என்ற கண்டிஷனை போட்டிருக்கின்றார். அதற்கு ஐஸ்வர்யாவும் ஓகே கூறி இருக்கிறாராம். இந்த பேச்சு தற்போது கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசும் பொருளாக மாறி உள்ளது. ஆனால் இது குறித்து இரு வீட்டாரம் எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் இருந்து வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top