“பாஜக டூ திமுக?”…. 15 ஆண்டுகால மௌனம் கலைந்தது… எஸ்.வி. சேகர் எடுத்த திடீர் முடிவு….!

By Nanthini on தை 23, 2026

Spread the love

சமீபகாலமாக திமுகவிற்கு ஆதரவான கருத்துக்களைத் தெரிவித்து வரும் நடிகர் எஸ்.வி. சேகர், வரும் சட்டமன்றத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடப் போவதாகப் பரவலான தகவல்கள் வெளியாயின. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது எக்ஸ் (X) தளத்தில் அவர் விளக்கமளித்துள்ளார். தான் தேர்தல் அரசியலில் இருந்து 15 ஆண்டுகளுக்கு முன்பும், பாரதிய ஜனதா கட்சியிலிருந்து 3 ஆண்டுகளுக்கு முன்பும் முழுமையாக விலகிவிட்டதாக அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், வரும் தேர்தலில் திமுகவின் வெற்றிக்காகத் தீவிரமாகப் பிரசாரம் செய்யப்போவதாக அவர் அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமைக்குத் தான் என்றும் துணையாக நிற்பேன் என்றும், திமுகவின் தேர்தல் பணிகளில் தனது பங்களிப்பு இருக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இதன் மூலம் தேர்தல் களத்தில் வேட்பாளராக இல்லாமல், ஒரு நட்சத்திரப் பேச்சாளராகவும் ஆதரவாளராகவும் எஸ்.வி. சேகர் செயல்படவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளத