தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கும் சூரி, காமெடியன் என்பதை தாண்டி ‘விடுதலை’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான இப்படம், சூரியின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்து, பாராட்டுகளை குவித்தது. கான்ஸ்டேபிள் கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்தி நடித்திருந்தார் சூரி.
‘விடுதலை’ படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், சூரிக்கு அடுத்தடுத்து, ஹீரோவாக நடிக்க வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கொட்டுக்காளி படத்திலும் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் சூரி. இதுதவிர மேலும் சில படங்கள் இவரின் கைவசம் உள்ளது.
ஹீரோவாக நடித்தாலும், தொடர்ந்து காமெடி வேடத்திலும் நடிப்பேன் என கூறியுள்ளார் நடிகர் சூரி. இந்நிலையில் தற்போது மீண்டும் வெற்றிமாறனுடன் இணையவுள்ளார் சூரி. இந்தப் படத்தின் பூஜை தற்போது போடப்பட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திலும் சூரி நாயகனாகவே இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் இன்றைய தினம் பூஜையுடன் கும்பகோணத்தில் துவங்கியுள்ளது. இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கவுள்ள இந்தப்படத்திற்கு கதை எழுதியுள்ளார் வெற்றிமாறன்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். படத்தில் சூரியுடன் சசிக்குமாரும் முதன்மை கேரக்டரில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் படத்தில் உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஷிவதா நாயர், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர். மல்ட்டி ஸ்டார் கான்செப்டில் ஆக்ஷன் என்டர்டெயினராக இந்தப் படம் உருவாகவுள்ளது.தற்பொழுது இத்திரைப்படத்தின் பூஜை வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் சூரி.இதோ அந்த வீடியோ…
View this post on Instagram