பாலிவுட்டில் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் சோனு சூட். நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியவர். அதன்பிறகு சிம்பு நடித்த ஒஸ்தி, சூப்பர் ஸ்டார் நடித்த சந்திரமுகி உள்ளிட்ட திரைப்படங்களில் முரட்டு வில்லனாக நடித்திருப்பார். அதனைப் போலவே பல்வேறு ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் வில்லன் ரோலில் நடித்து மிரட்டி உள்ளார். திரையில் வில்லனாக இருந்தாலும் கொரோனா காலகட்டத்தில் அடுத்தடுத்து இவர் செய்த உதவிகளால் நிஜத்தில் ஹீரோ என்பதை நிரூபித்து காட்டினார்.
குறிப்பாக கொரோனா லாக்டவுன் காலத்தில் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்தது மட்டுமல்லாமல் நம்ம ஊர் மருத்துவ மாணவர்கள் ரஷ்யாவிலிருந்து சென்னை திரும்ப தனி விமானம் ஏற்படுத்தி கொடுத்தது என கணக்கில் இல்லாத பல உதவிகளை செய்தார்.
அதன்பிறகு தனது சோசியல் மீடியா பக்கங்களில் நாளுக்கு நாள் உதவி கேட்டு வருவோருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்ததோடு தற்போது வரை தன்னுடைய உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றார். அதுமட்டுமல்லாமல் அடுத்தடுத்து உதவி கேட்போருக்கு கொடுப்பதற்காக தன்னுடைய பெயரிலும் மனைவி சோணாதி பெயரிலும் உள்ள இரண்டு கடைகள் 6 குடியிருப்புகள் என மொத்தம் எட்டு சொத்துக்களை 10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளார்.
இப்படி மக்கள் சேவையில் தீவிரமாக இறங்கியுள்ளதால் மக்கள் இவரை ரியல் ஹீரோவாக பார்ப்பதால் பல படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகின்றார். இப்படியான நிலையில் சோனு சூட் சென்னையில் தெருவோரமாக உள்ள தள்ளுவண்டி இட்லி கடை ஒன்றுக்குச் சென்று அங்கு அவரே தோசை சுட்டு அங்கிருந்தவர்களுக்கு கொடுத்துள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…
நடிகர் விஜய் அவர்கள் 4-வது முறையாக ஆளுநரைச் சந்தித்து, ஆட்சி அமைப்பதற்கான தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் தனது…
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குர்ஹானி பகுதியில், காதலனுடன் பேசிக்கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் மூன்று பேர் கொண்ட…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியமைப்பதைத் தடுக்கும் உள்நோக்கத்துடன் ஆளுநர் அனுமதி மறுத்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளித்தாலும், திமுக தலைமையிலான கூட்டணியிலேயே தொடருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.…
மிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், தனது கட்சியின் பெரும்பான்மை ஆதரவுக் கடிதத்தை நாளை ஆளுநரிடம் ஒப்படைக்க உள்ளதாகத்…