Connect with us

CINEMA

நடிகர் சிவகுமாரின் மகளா இவர்?… சும்மா இப்படி பாடி அசத்துறாங்களே…. வைரலாகும் வீடியோ… லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சிவகுமாரின் மகளும், சூர்யா கார்த்தியின் சகோதரியுமான பிருந்தா தற்பொழுது பாடகியாக களமிறங்கி கலக்கிக் கொண்டுள்ளார். இவர் தனது தந்தை மற்றும் அண்ணன்களை தொடர்ந்து திரையுலகில் பாடகியாக ‘மிஸ்டர் சந்திரமௌலி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

   

ஜாக்பாட், பொன்மகள் வந்தாள் உட்பட ஒரு சில படங்களில் அவர் பாடல்கள் பாடியுள்ளார். பாடகியாக இருந்த அவர் ’பிரம்மாஸ்திரா’ என்ற படத்தில் நாயகியான ஆல்யா பட் அவர்களுக்கு குரல் கொடுத்து டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

பிருந்தா சிவகுமாருக்கும் பிரபல கிரானைட் தொழிலதிபர் சிவக்குமாருக்கும் கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.  இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தற்பொழுது தமிழ் சினிமாவில் பாடகியாகவும், டப்பிங் கலைஞராகவும் வலம் வருகிறார் பிருந்தா சிவகுமார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் பிருந்தா சிவக்குமார். இவர் தற்பொழுது’ மாமன்னன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நெஞ்சமே’ பாடலை தன் இனிய குரலில் பாடி ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார். மேலும் ரசிகர்கள் இந்த வீடியோவிற்கு லைக்ஷ்களை  அள்ளிக் குவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Brindha Sivakumar (@brindhashiv)

Continue Reading

More in CINEMA

To Top