நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த சிவகார்த்திகேயன் படிப்படியாக முன்னேறி தற்போது இந்த இடத்திற்கு வந்திருக்கின்றார். மெரினா திரைப்படத்தின் மூலமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் மிகச் சிறப்பான திரைப்படங்களை எல்லாம் தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றார்.
இவர நடிப்பில் கடைசியாக வெளியான அயலான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இதைத் தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார்.
இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கின்றார். மேலும் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபுவுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. இது ஒரு புறம் இருக்க சுதா கொங்குரா இயக்கத்தில் நடிகர் சூர்யாவால் கைவிடப்பட்ட புறநானூறு என்ற திரைப்படத்திலும் நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிக்க இருக்கின்றார் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது.
அதோடு டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தியுடனும் ஒரு திரைப்படத்தில் கமிட்டாகி நடிக்க இருக்கிறாராம். இப்படி கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது மற்றொரு டாப் இயக்குனர் உடன் ஜோடி சேர இருக்கின்றார். அவர்தான் ஹச் வினோத், இவர் நடிகர் அஜீத்தை வைத்து கடைசியாக கொடுத்த துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து நடிகர் விஜய் வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றது.
இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்தும் ஒரு படத்தை அவர் இயக்க இருக்கின்றாராம். இது தொடர்பாக வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்திருந்ததாவது: “ஹெச் வினோத் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பது உண்மைதான். ஆனால் எப்போதும் போல ஹெச் வினோத் பல கண்டிஷன்களை போட்டு இருக்கின்றார்.
முதலில் விஜய் திரைப்படத்தை முடித்துவிட்டு அதன் பிறகு தனுசுடன் ஒரு படத்தை முடித்துவிட்டு பின்னர் தான் சிவகார்த்திகேயனை வைத்து திரைப்படத்தை இயக்க முடியும் என்று கூறி இருக்கிறாராம். இதற்கு இடையில் நடிகர் அஜித் தன்னை அழைத்தாலும் அவருடனும் படத்தை முடித்துவிட்டு தான் இந்த படத்தை என்னால் எடுக்க முடியும் என்று அவர் கூறியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…