ஒரே கல்லில் 2 மாங்கா அடிக்க பாத்த SK… குரு – சிஷ்யன் இரண்டு பேரிடமும் மாட்டிக்கொண்டு தவிக்கும் பரிதாபம்…

By Begam

Published on:

சின்னத்திரையில் ஆங்கராக தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்போது தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான்  நடிகர் சிவகார்த்திகேயன். தற்பொழுது இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்கே 21 ‘அமரன்’ எனும்  படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் . சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக  நடித்துவரும் இத்திரைப்படத்தினை உலக நாயகன் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

   

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்து வருவதும், ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத்  இசையமைத்தும் வருகிறார்.

இயக்குனர் ஏ ர் முருகதாஸ் வித்தியாசமான கதைக்களத்தில் தனது முத்திரையுடன் கூடிய,  ஆக்சன் கமர்சியல் என்டர்டைனராக இப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் கன்னட நடிகை ருக்மணி வசந்த் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படி  நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது ஒரே சமயத்தில் குரு -சிஷ்யன் என இருவரது  படங்களில் கமிட் ஆகி இருப்பது அவருக்கு பெரும் பிரச்சனையாக அமைந்துள்ளது.

அதாவது அமரன் திரைப்படத்தில் நடிக்க 20 நாள் இடைவெளி இயக்குனர் முருகதாஸிடம் கேட்க அவரோ ‘இல்லை தர முடியாது’ என மறுத்துவிட்டாராம். அதற்கு காரணம் அமரன் படத்தில் ராணுவ வீரராக நடிப்பதால், அந்த உடலமைப்புக்கு மாறி விட்டால் திரும்ப இங்கு  செட்டாகாது. எனவே இந்த படத்தை முடித்து கொடுத்துவிட்டு ,அவருடைய  படத்தில் சென்று நடித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டாராம். இப்படி ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிக்க பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது இருவருக்கும் இடையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறாராம்.