Connect with us

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதியை உதயநிதியிடம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்..

CINEMA

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதியை உதயநிதியிடம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்..

 

சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோரதாண்டவம் ஆடிய மிக்ஜாம் புயலால் பெருமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சென்னை முழுவதும் வெள்ளத்தில் சிக்கியது. திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாக இருக்க மாநகராட்சி ஊழியர்களின் தொடர் முயற்சியால் வெள்ள நீர் துரிதமாக அகற்றப்பட்டு வருகிறது.

Nithyananda

   

சாலைகளில் தேங்கி இருந்த வெள்ள நீர் பெரும்பாலும் அகற்றப்பட்ட நிலையில் தற்போது மக்கள் வசிக்கும் பகுதிகள் உள்ள நீரை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.வெள்ள பாதிப்பால் பல கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளதால் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக ரூ.5000 கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.

இதுதவிர சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் தங்களால் முடிந்த உதவியை முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர்.இந்த நிலையில் நடிகர்கள் அரசியல் பிரபலங்கள் என பலரும் நிவாரண நிதியாக நிதி உதவி அளித்து வருகின்றனர். நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக் 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்திருந்தனர்.

actor Sivakarthikeyan

இவர்களைத் தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் 1 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்திருந்தார். இந்நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து 10 லட்சம் ரூபாய்க்கு செக் வழங்கியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த செயலை ரசிகர்கள் மனதார பாராட்டி வருகின்றனர்.

#image_title

Continue Reading
To Top