Connect with us

தேசிய விருது பெற்ற இயக்குனருடன் புதிய கூட்டணி.. சிவகார்த்திகேயன் கைவசம் இருக்கும் படங்கள்..!

CINEMA

தேசிய விருது பெற்ற இயக்குனருடன் புதிய கூட்டணி.. சிவகார்த்திகேயன் கைவசம் இருக்கும் படங்கள்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது பல திரைப்படங்களை தனது கையில் வைத்திருக்கின்றார். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கின்றார்.

மேலும் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகின்றது. இந்த திரைப்படம் மேஜர் முகுந்து வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்த திரைப்படத்தின் சூட்டிங் முடிந்து ரிலீஸ்-க்கு தயாராகி இருக்கின்றது. அமரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்கே 23 திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வருகின்றார்.

   

 

இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கின்றார். அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இது இல்லாமல் சிவகார்த்திகேயன் ஏற்கனவே இரண்டு திரைப்படங்களை கையில் வைத்திருக்கின்றார். டான் திரைப்படத்தை இயக்கியிருந்த சிபிச் சக்கரவர்த்தி இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார்.

இதை தொடர்ந்து கோட் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து இருக்கின்றார். இந்த இரண்டு படங்களை தவிர்த்து சிவகார்த்திகேயன் தற்போது மூன்றாவது திரைப்படத்திலும் இணைந்திருக்கின்றார். அதாவது சூரரைப் போற்று படத்துக்காக தேசிய விருது வென்ற சுதா கோங்குரா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

அண்மையில் நடிகர் சூர்யா அவர்களை வைத்து புறநானூறு என்கின்ற திரைப்படத்தை இயக்குவதற்கு கமிட்டாகி இருந்த நிலையில் அந்த படத்தின் சூட்டிங் தள்ளி வைக்கப்பட்டது. சமீபத்தில் அப்படத்தில் இருந்து சூர்யா விலகியதாக தகவல் வெளியான நிலையில் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்திருப்பதாக கூறப்படுகின்றது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top