தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான அயலான் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து கைவசம் ஏராளமான படங்களுடன் செம்ம பிசியான நடிகராக வலம் வருகிறார் எஸ்.கே.
அவரின் அடுத்த படமான ‘அமரன்’ திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். கமல்ஹாசன் தான் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் ஒரு ராணுவ வீரரின் வாழ்வில் நடந்த உண்மை கதை என்று சொல்லப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் முடிவடைய உள்ள நிலையில், அதற்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படங்கள் தான் ஹைலட்டாக பேசப்படுகிறது. அதன்படி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 25 வது படத்தை நடிக்க உள்ளாராம்.
இத்திரைப்படம் முழுவதும் அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் இருக்கும் எனவும் , மேலும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த 25 வது படம் அவருக்கு கைகொடுக்குமா? இல்ல காலவாருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.