![m 6 - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/06/m-6.jpg)
CINEMA
என் மனைவி ஆர்மில இருக்காங்க.. என்னோட 5 படம் தான் பார்த்து இருக்காங்க.. மகாராஜா படத்தை பார்த்துட்டு..? மனம் திறந்து பேசிய இயக்குனர் சிங்கம் புலி..!!
பிரபல நடிகரான சிங்கம் புலி மாயாண்டி குடும்பத்தார், மனம் கொத்தி பறவை, தேசிங்குராஜா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படங்களில் இவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை சிரிக்க வைக்கும் விதமாக இருக்கும். அஜித் குமார் நடித்த ரெட் திரைப்படத்தையும், சூர்யா நடித்த மாயாவி திரைப்படத்தையும் சிங்கம் புலி இயக்கியுள்ளார்.
நடிகர் சிங்கம் புலி சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். நிகழ்ச்சி தொகுப்பாளர் நீங்கள் உங்கள் மனைவி பற்றி கூறுங்கள் என கேட்டார். அதற்கு பதில் அளித்த சிங்கம் புலி எனது மாமா பெண்ணை தான் திருமணம் பண்ணினேன். அவங்களோட பூர்வீகம் அந்தமான். எனது மாமா அத்தைக்கு என்னை ரொம்ப பிடிக்கும்.
இப்போது என் மனைவி ஆர்மில கர்னலா இருக்காங்க. பெரும்பாலும் என் மனைவி ஹிந்தி படம் தான் பார்ப்பாங்க. இதுவரைக்கும் நான் நடிச்ச 5 படங்கள் மட்டுமே என் மனைவி பார்த்து இருக்காங்க. மற்றபடி வேறு யாராவது உயர் அதிகாரிகள் உங்க கணவர் பண்ணின படம் சூப்பரா இருக்குன்னு சொன்னா என்கிட்ட வந்து சொல்லுவாங்க. இப்ப மகாராஜா படத்தை பார்த்துட்டு என்ன சொல்லப் போறாங்கன்னு தெரியல.
பெரும்பாலும் என் மனைவி என்கிட்ட நகை அடக்க வைக்க கூடாது. யார்கிட்டயும் கடன் வாங்க கூடாது. வட்டி கட்டக்கூடாது. எதுனாலும் நான் பண்றேன் அப்படின்னு தான் சொல்லுவாங்க. எனக்கு ரெண்டு மகன்கள் இருக்காங்க. வீடு வேணுமா வாங்கலாம். கார் வேண்டுமா வாங்கலாம். எதுனாலும் நான் பண்ணுறேன்னு தான் சொல்லுவாங்க எனக்கு அந்த விஷயத்துல எந்த பிரச்சினையும் இல்ல. படம் பண்றது நல்லபடியா பண்ணிட்டு போகணும்னு நினைக்கிறேன் என ஓபன் ஆக பேசி உள்ளார்.