போதைப்பொருள் வழக்கில் நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரும், முன்னாள் உதவியாளருமான சர்புதீன் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்களில் சர்புதீனும் ஒருவர். இவர் ஏற்கெனவே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்த இயக்குநர் அமீரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், தனது நண்பர் கைதால் நடிகர் சிம்பு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
