தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் கமலஹாசன். சினிமாவில் அனைத்து துறைகளிலும் கை தேர்ந்தவராக திகழும் கமலஹாசன் தற்போது இருக்கும் தலைமுறைக்கு டப் கொடுக்கும் நபர். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதனை கற்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணக்கூடியவர். தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட புதிய புதிய நுட்பங்களையும் டெக்னாலஜிகளையும் புகுத்தியவர் கமலஹாசன்.

தமிழ் சினிமாவை பாலிவுட் சினிமா அளவிற்கு தரம் உயர்த்தியதில் இவரின் பங்கும் உண்டு. சமீபகாலமாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த கமலஹாசன், விக்ரம் திரைப்படத்தின் மூலம் ரிஎன்றி கொடுத்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.

இதையடுத்து அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். ஒரு பக்கம் திரைப்படங்களில் நடிப்பது மறுபக்கம் தனது தயாரிப்பு நிறுவனத்தில் புதிய புதிய திரைப்படங்களை தயாரிப்பது என்று பிசியாக இருந்து வருகின்றார், மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைப் திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகின்றார், இவர் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து அமரன் படத்தில் ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துவிட்டார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் நடிகர் சிவராஜ் குமார் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கமல் குறித்து பேசியுள்ளார். அதாவது, கமல் சார் எனக்கு கண்ணு போல, அவரை ஒரு தடவை கட்டிப்பிடிச்சுட்டு மூணு நாள் குளிக்கவே இல்ல அந்தளவுக்கு வெறியன் நான், அவரோட படத்துக்கு முதல் நாள் முதல் காட்சி நானே ராஜ்கமல் ஆபிஸ்க்கு கால் பண்ணி டிக்கெட் வாங்குவேன், அவரோட கண்ணு, தோற்றம் “கமல் கமல் தான்” என்று பேசியுள்ளார்.
