Categories: சினிமா

திருச்செந்தூர் முருகனை குடும்பத்துடன் காண வந்த நடிகர் செந்தில்.. ரசிகர்கள் செய்த செயல்.. வைரலாகும் வீடியோ..!

Spread the love

தமிழ் சினிமாவில் 80’s, 90’s காலகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக வளம் வந்த செந்தில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய காமெடி நடிகராக வளம் வந்தவர் செந்தில். ஒரு கோவில் இரு தீபங்கள் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இருப்பினும் இவரின் காமெடி அந்த அளவுக்கு பிரபலமாகவில்லை.

அதை தொடர்ந்து கவுண்டமணியுடன் இணைந்து செந்தில் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இவர்கள் காம்போவில் வெளியாகும் திரைப்படங்களுக்காகவே ரசிகர்கள் கூட்டம் திரையரங்குக்கு சென்றன. வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன், சின்ன கவுண்டர் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள் இவர்களின் சிறந்த காமெடிக்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.

அதிலும் கவுண்டமணி செந்திலை அடிக்கும் போதெல்லாம் சிறிது கூட ஈகோ பார்க்காமல் அவ்வளவு அற்புதமாக நடித்திருப்பார். தமிழ் சினிமாவில் மற்ற காமெடி நடிகர்களின் வரவால் சினிமாவிலிருந்து சற்று ஒதுங்கி இருந்த செந்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார்.

தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. சமீபத்தில் கூட இவரது மனைவி தனியார் youtube சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் நடிகர் செந்தில் குறித்தும் அவரது மகன்கள் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

பொதுவாக செந்தில் சாமி பக்தி அதிகம் கொண்டவர். அடிக்கடி இவர் கோவில் செல்லும் வீடியோக்கள் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகும். அந்த வகையில் தற்போது திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கின்றார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

3 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

3 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

4 மணத்தியாலங்கள் ago