Connect with us

குடும்பத்துடன் தனது சொந்த ஊரில் நடைபெற்ற அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட நடிகர் சரத்குமார்… வைரலாகும் போட்டோஸ்…

CINEMA

குடும்பத்துடன் தனது சொந்த ஊரில் நடைபெற்ற அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட நடிகர் சரத்குமார்… வைரலாகும் போட்டோஸ்…

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் சரத்குமார். இவர் தமிழில் வெளிவந்த ‘கண் சிமிட்டும் நேரம்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

   

இதைத்தொடர்ந்து சூரியன், வைதேகி கல்யாணம், சேரன் பாண்டியன், சூர்யவம்சம், சமுத்திரம் என நல்ல நல்ல படங்களில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜயின் தந்தையாக நடித்து அசத்தியுள்ளார்.

மேலும் ,பிரம்மாண்டமாக ரிலீசான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் பெரிய பழுவேட்டாரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரலட்சுமி சரத்குமார் மற்றும் பூஜா சரத்குமார் இருவரும் சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள். இவர்களில் வரலக்ஷ்மி சரத்குமார் தற்பொழுது முன்னணி நடிகைகளில் ஒருவராக திரையுலகில் வலம்  கொண்டுள்ளார்.

நடிகர் சரத்குமார் நடிகை ராதிகாவை 2001ல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 80 களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதிகா.

ராடன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி, சித்தி, அரசி, வாணி ராணி ,செல்லமே என பல ஹிட் சீரியல்களை தயாரித்தும் வருகிறார்.

இவர்களுக்கு ராகுல் சரத்குமார் என்ற மகனும் உள்ளார். ரேயான் மிதுன் என்ற மகள் நடிகை ராதிகாவின் முதல் கணவருக்கு பிறந்தவர்.

தற்பொழுது திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் இவர்கள் பிசியாக பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றனர்.

இந்நிலையில்  நடிகர் சரத்குமார். தனது மனைவி ராதிகா சரத்குமார், மகள் வரலக்ஷ்மி, மகன் என மொத்த குடும்பத்துடன் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள தளக்காவூர் கிராமத்தில் இருக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோவில் பிரதிஷ்டை மற்றும் சிராவயல் கிராமத்தில் உள்ள  குலதெய்வம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவிலின் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த விழா தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பகிர, ரசிகர்கள் மத்தியில் இந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Sarath Kumar (@r_sarath_kumar)

 

Continue Reading
To Top