#image_title
விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகர் ரோபோ சங்கர். இவர் நடிகர் கமல், விஜயகாந்த், கார்த்திக் என பல நடிகர்களை அப்படியே பிரதிபலித்து மக்களின் உள்ளங்களைக் கவர்ந்து பிரபலமானார். அதனை தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற ரோபோ ஷங்கர் வெள்ளித்திரையில் ‘தீபாவளி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரோபோ ஷங்கர் பின்னர் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற பல நடிகர்களுடன் இணைந்து காமெடியில் கலக்கினார். இவரது மகளான இந்திரஜா ஷங்கர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் – நயன்தாரா நடிப்பில் வெளியான ‘பிகில்’ திரைப்படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
இதனைத் தொடர்ந்து விருமன் படத்திலும் நடித்திருந்தார். ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘சர்வைவர்’ நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தற்பொழுது பிசியாக கமிட்டாகி நடித்து வருகிறார். நடிகை இந்திரஜா கார்த்திக் என்பவரை காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். கார்த்திக் மதுரையை சேர்ந்தவர். ‘தொடர்வோம்’ என்ற பெயரில் தன்னார்வல அறக்கட்டளையின் மூலம் சில குழந்தைகளை வளர்த்து வருகிறார்.
ரோபோ ஷங்கரின் பூர்வீகமும் மதுரை என்பதால் இவர்கள் இருவரும் ஒரே ஊரை சேர்ந்ததால் உறவினர்களாக இருக்க கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் சென்னையில் நேற்று நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக ரசிகர்களும், பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…
தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக,…
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள மூத்த அரசியல்வாதி கே.ஏ.…
மகாராஷ்டிர மாநில அமைச்சர் சஞ்சய் சிர்சாத், சத்ரபதி சம்பாஜிநகர் மாநகராட்சி அலுவலகம் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் மாநில அரசியலில் பெரும்…
தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.…