தளபதி விஜய் அவர்கள் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “GOAT” படத்தில் நடித்து வருகிறார், அதன் கிடையே பிப்ரவரி 2-ம் தேதி தனது முகநூல் மூலமாக அரசியலுக்கு வரப்போவதாக ஒரு அறிக்கை ஒன்று வெளியிட்டு, அரசியல் கட்சியின் பெயரையும், சில நாட்களுக்கு முன்னால் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, கொள்கை அனைத்துமே வெளியிட்டிருந்தார். அதன் பின் அவர் சினிமா விட்டு மொத்தமாக விலகப் போவதாகவும், நடிக்கும் இப்படமும் அதன் பின் விஜய்-69 படமும் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக மாற உள்ளதாக தெரிவித்திருந்தார்.
தளபதி விஜய் அவர்களின் மனைவி சங்கீதா அவர்கள் மகள் வெளிநாட்டில் படிப்பதற்காக மகள் சென்றதுக்கு, விஜயின் மனைவி சங்கீதாவும் உதவியாக துணைக்கு அவருடன் வெளிநாட்டில் இரண்டு வருட காலமாக தங்கி வருகிறார்.
தற்போது இதை வைத்து பயில்வான் ரங்கநாதர் விஜயின் மனைவி விஜயை விட்டு தனியாகப் பிரிந்து வெளிநாட்டில் இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா என்று பரபரப்பான சர்ச்சையை கிளப்பியுள்ளார்,
அதாவது விஜய் அவர்களுக்கும் அவர் மனைவி சங்கீதா அவர்களுக்கும் சரியான பேச்சு வார்த்தை இல்லாததால் தான் மகள் படிப்பதற்காக வெளிநாடு சென்று உள்ளேன் என்று வெளியில் பிம்பத்தை காண்பித்து விட்டு இவர்கள் இடையில் இருக்கும் பிரச்சனைக்காக இருவரும் தனியாக பிரிந்து உள்ளாராம், இதில் விஜயின் மகளுக்கும் விஜய்க்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதால் அவரும் அங்கு சென்றதுக்கு காரணம் இதுவாகத்தான் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார், சஞ்சய் அவர்கள் படம் எடுப்பதற்கு குறித்து விஜய் அவர்களிடம் எந்த ஆலோசனையும் செய்யவில்லை, இதற்கு விஜய் அவர்களும் சஞ்சய் விஷயத்திலும் தலையிடாமல் இருப்பதற்கும் இதுதான் காரணம்.
ஏனென்றால் தன் கட்சி ஆரம்பித்ததற்காகவும், தான் சினிமா துறையை விட்டு செல்வதை பற்றியும் இதுவரை தன் மகளிடமும் தன் தந்தை, தாயிடமும், மனைவியிடமும் இவர் கூறவில்லை என்றும், எந்த ஒரு விஷயத்திலும் கலந்து ஆலோசனை செய்யாமலும் இருக்கிறார் என்றும், இதுவரை அவர் மனைவி இரண்டு வருட காலங்களில் ஒரு நாள் கூட விஜய்யை வந்து பார்த்து செல்லவில்லை என்று, அதனால் இவர்கள் இரண்டு பேருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஆகி இருவரும் பிரிந்து உள்ளார்கள் என்று பயில்வான் ரங்கநாதன் அவர்கள் விஜயையும் விஜயின் மனைவி சங்கீதாவை வைத்து மிக சர்ச்சையான பேச்சை பேசி வெளியில் பரப்பி வருகிறார். தற்போது அது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது, இதை கண்ட ரசிகர்கள் கொந்தளித்து எழுந்து பயில்வான் ரங்கநாதன் மீது கருத்து வேறுபாடை தெரிவித்து வருகிறார்கள்.
