#image_title
சினிமாவில் தன்னுடைய 50 ஆவது ஆண்டை தொடப் போகிறார் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. இளையராஜா 76 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம் அறிமுகமான நிலையில் ஐந்தே ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இசையமைப்பாளராக ஆனார்.
#image_title
அதன் பிறகு மிடாஸ் மன்னன் போல அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறின. இளையராஜாவுக்கும் மற்ற இசையமைப்பாளர்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால் இளையராஜா நூற்றுக் கணக்கான பாடல்களை எழுதியுள்ளார் என்பது. அவற்றி பல பாடல்கள் சூப்பர்ஹிட். அது மட்டுமில்லாமல் பல பாடல்களுக்கு அவரே பல்லவி சொல்லிவிட்டு, அதைத் தொடர்ந்து கவிஞர்களைப் பாட எழுத சொல்லிவிடுவார்.
அப்படிதான் ஆண்பாவம் படத்தில் இடம்பெற்ற வாலி எழுதி ‘காதல் கசக்குதய்யா’ பாடலிலும் சில வரிகளை எழுதிக் கொடுத்துள்ளார். இது பற்றி ஆண்பாவம் படத்தில் இணை இயக்குனராகப் பணியாற்றிய நடிகர் ரமேஷ் கண்ணா பேசும்போது “அந்த பாடலைக் கம்போஸ் செய்யும் போதே இளையராஜா வரிகளைப் போட்டு பாட ஆரம்பித்துவிட்டார்.
அவர் ஒரு வரியின் பாதியை சொல்லிவிட்டு அடுத்த பாதிக்கு யோசிக்கும்போது நான் எடுத்துக் கொடுப்பேன். வழக்கமாக இதுபோல எல்லாம் யாரும் அவரிடம் சொல்ல முடியாது. ஆனால் நான் சொன்ன வரிகள் பிடித்துப் போனதால் அவர் உற்சாகமாகிவிட்டார். இப்படி அந்த பாடலில் சில வரிகளை நான் சொல்லியுள்ளேன். எம்ஜிஆர், சிவாஜி, கிட்டப்பா மற்றும் பாகவதர் பற்றிய வரிகள் எல்லாம் நான் சொன்னதுதான்” எனக் கூறியுள்ளார்.
இந்த வீடியோவில் நீங்கள் விவரிக்கும் காட்சிகள் உண்மையிலேயே மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. பொது இடத்தில் ஒரு பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொள்வது, அவர்…
சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் இந்த வீடியோ, பார்ப்பவர் நெஞ்சங்களை பதற வைக்கிறது. ஒரு பெண் தனது கணவர்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்வது எப்படி மற்றும்…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, சினிமாவில் இருந்து விலகப்போவதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய படத்தில்…
மதுபோதை தகராறைத் தடுத்து நிறுத்த முயன்ற 38 வயது சமையல் கலைஞர் சுமன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளா…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு தாய் தனது மூன்றரை வயது சிறுவனிடம், "நான் உன்னை…