Connect with us

11 வருடம் கழித்து பிறந்த குழந்தை… ராம் சரண் – உபாசனா தம்பதியின் குழந்தையை பார்த்துக் கொள்பவருக்கு மாத சம்பளம் இத்தனை லட்சமா..? 

CINEMA

11 வருடம் கழித்து பிறந்த குழந்தை… ராம் சரண் – உபாசனா தம்பதியின் குழந்தையை பார்த்துக் கொள்பவருக்கு மாத சம்பளம் இத்தனை லட்சமா..? 

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மகன் என்ற அடையாளத்தோடு திரையுலகில் கால் பதித்து தற்பொழுது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ராம்சரண் . இவர் ‘சிறுத்தை’ எனும் திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான ‘மகதீரா’ திரைப்படம் இவரை பிரபலமாக்கியது. இப்படத்தின் மூலம் நடிகர் ராம்சரண் பான் இந்திய நடிகராக மாறிவிட்டார். தொடர்ந்து டோலிவுட்டில் தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அப்பாவை போலவே நட்சத்திர நடிகராக இளம் வட்டாரத்தை வளைத்துவிட்டார் என்று கூறலாம். இவர் பாகுபலி இயக்குனர் ராஜமவுளி இயக்கத்தில் வெளியான RRR  திரைப்படத்தில் கூட ராம்சரண் சிறப்பாக நடித்திருந்தார்.  இந்த படம் பான் இந்தியா அளவில் மாபெரும் வெற்றிகண்டதோடு இரண்டு ஆஸ்கர் விருதையும் தட்டி தூக்கியது. இதனை தொடர்ந்து ராம் சரண் தற்பொழுது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

   

 

நடிகர் ராம்சரண் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே உபாசனா காமினேனி என்பவரை காதலித்து 2012 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.  இந்நிலையில் கடந்த ஆண்டு ராம் சரணின் மனைவி உபாசனா ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனால் சிரஞ்சீவி குடும்பமே மகிழ்ச்சியடைந்தது.

இந்நிலையில் தற்பொழுது நடிகர் ராம் சரண் தனது குழந்தையை பார்த்துகொள்வதற்காக பெண் ஒருவரை நியமித்து உள்ளாராம். அவருடைய மாத சம்பளத்தை கேட்டா அசந்து போயிடுவீங்க. அந்த பெண்ணுக்கு மட்டும் மாதம் 5 லட்சம் கொடுக்கிறாராம் ராம் சரண். தற்பொழுது இத்தகவல் தான் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Continue Reading
To Top