CINEMA
கலைஞர் சொன்னதால் அதை மாற்றிக் கொண்ட ரஜினி.. சிறு பிள்ளை போல் நடந்து கொண்டதை பார்த்து நெகிழ்ந்த கருணாநிதி..!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் கலைஞர் கருணாநிதி சொன்ன ஒரு விஷயத்தை மாற்றிக்கொண்ட சம்பவத்தை பற்றி தான் இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம். தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கள் முதலிடத்தில் இருப்பது நடிகர் ரஜினிகாந்த். தலைவர் என்று செல்லமாக அனைவராலும் அழைக்கப்பட்டு வரும் இவர் தொடர்ந்து 70 வயதை தாண்டிய நிலையிலும் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார்.
அதிலும் அவர் கடைசியாக நெல்சன் இயக்கத்தில் நடித்திருந்த ஜெயிலர் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு கொடுக்க அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை முடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கலாநிதி மாறன் தயாரிக்கும் கூலி என்கின்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார்.
தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் அபுதாபி சென்று இருந்தார். அங்கு அவருக்கு கோல்டன் விசா கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தன.
இப்படி இளம் தலைமுறைக்கு டஃப் கொடுக்கும் வகையில் அடுத்தடுத்து திரைப்படங்களில் சிறப்பாக நடித்து வரும் ரஜினி கலைஞர் கருணாநிதி மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அவர் சொன்னால் எதையும் மறுக்காமல் செய்யக்கூடியவர். அப்படி கருணாநிதி சொன்ன ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் உடனே மாற்றிக் கொண்டுள்ளார். ஒருமுறை நடிகர் ரஜினிகாந்த் பொது நிகழ்ச்சி ஒன்று கலந்து கொண்டிருக்கிறார்.
அந்த நிகழ்ச்சிக்கு கருணாநிதியும் வந்திருந்தார். அப்போது கருணாநிதி ரஜினிகாந்தை பார்க்கும்போது நரைத்த தாடியுடன் இருந்திருக்கின்றார். இதனை அவரிடம் நேராக சொல்லாமல் நண்பர் ஒருவரிடம் கூறி ரஜினிகாந்த் ஒரு நல்ல தலைவர். பொதுவெளியில் வரும்போது இப்படியா வருவது, பலருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய ரஜினியை இப்படி செய்யலாமா என்று கூறியிருக்கின்றார்.
மேலும் நான் சொன்னதாக இதனை போய் அவரிடம் சொல்லுமாறும் கூறியிருக்கின்றார். அவரது நண்பரும் உடனே நடிகர் ரஜினிகாந்த் இடம் சென்று கூற அடுத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு படத்தை பார்ப்பதற்காக ரஜினிகாந்த் திரையரங்குக்கு சென்று இருக்கின்றார். அதே சமயம் கருணாநிதியும் அங்கிருந்து படத்தை பார்த்து முடித்துவிட்டு வெளியில் வந்திருக்கின்றார்.
அவரைப் பார்த்தவுடன் நடிகர் ரஜினிகாந்த் தனது முகத்தை இப்படியும் அப்படியும் ஆக திரும்பி திரும்பி காட்டினார். அதாவது நான் டை அடித்து நீட்டாக வந்திருக்கின்றேன் என்று தனது பாடி லாங்குவேஜ் மூலம் கூறியிருக்கின்றார், இதை பார்த்து சிரித்துக் கொண்டே சென்ற கருணாநிதி அவரது நண்பரிடம் சென்று சிறு பிள்ளை போல் நடந்து கொண்டதை கூறி மகிழ்ச்சி அடைந்தாராம்.