Categories: சினிமா

‘எனக்காக நீங்க இதை செய்யவே வேண்டாம்’… தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த நடிகர் லாரன்ஸ்… என்ன சொன்னாருன்னு தெரியுமா..?

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ராகவா லாரன்ஸ். டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முகத் திறமை கொண்டவராக சினிமாவில் திகழ்ந்து கொண்டிருக்கிறார். முதலில் ரஜினியின் உழைப்பாளி மற்றும் ஜென்டில்மேன் உள்ளிட்ட திரைப்படங்களில் குரூப் டான்ஸராக பணியாற்றினார். அதன் பிறகு முனி திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இவர் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகராக மட்டுமின்றி பல்வேறு சமூக நலப்பணிகளையும் இவர் செய்து வருகிறார். தனது அறக்கட்டளை மூலம் பல மாற்றத்திறனாளிகளுக்கு பல வகைகளில் உதவி வருகிறார்.

அது மட்டும் இல்லாமல் தன் வீட்டிலேயே பல மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் அனாதை குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தனது ரசிகர்களுக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ் நல்ல மதிப்பு கொடுப்பவர். தனது ரசிகர்கள் குறித்து ஒருமுறை அவர் பேசும் பொழுது,  “என் படத்தை திரையரங்கில் வந்து பார்த்தால் மட்டும் போதும். என்னை பார்க்க அவர்கள் கூட்டமாக ஆடியோ விழா போன்ற நிகழ்வுகளுக்கு வர தேவையில்லை. ரசிகர்கள் என்னை பார்க்க வேண்டும் என்று புத்தாடைகள் வாங்கி போட்டுக்கொண்டு வாடகை வேன் புக் செய்து வருகின்றனர்.

சென்னையில் அறை எடுத்து தங்குகின்றனர். இதற்கெல்லாம் எவ்வளவு செலவாகிறது. அதற்கு பதிலாக ரசிகர்கள் ஒன்று திரண்டு என்னை பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தால் நானே ஒரு திருமண மண்டபம் புக் செய்து அவர்கள் ஊருக்கு சென்று அவர்களை பார்த்து வருவேன்” என கூறியுள்ளார். இதுபோன்ற மனது எத்தனை ஹீரோக்களுக்கு வரும்? என்று ரசிகர்கள் அவரை தற்பொழுது புகழ்ந்து வருகின்றனர்.

Begam

Recent Posts

சமூகவலைதள பதிவால் வந்த வினை…! வழக்கறிஞர் குடும்பம் மீது நாதக தாக்குதல்… நள்ளிரவில் வெறிச்செயல்… பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, காங்கிரஸ் பிரமுகர் நெல்சனின் வீட்டிற்குள் புகுந்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கும்பல் நடத்திய…

39 seconds ago

BREAKING: விஜய் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்… தவெக தொண்டர்கள் அதிர்ச்சி…!

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐந்து சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ள…

2 minutes ago

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. அடுத்த 24 மணிநேரத்தில் உடையப்போகும் பெரிய கட்சி… தமிழக வரலாற்றில் இதுவரை நடந்திராத மகா அதிசயம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை, அரை நூற்றாண்டு கால திராவிட அரசியல் வரலாற்றையே புரட்டிப் போடும் வகையில்…

9 minutes ago

மகளிர் குழுக்களுக்கு குட் நியூஸ்…! கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி…? அதிகாரிகள் தீவிர கள ஆய்வு…!

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கான ஆயத்தப் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.…

13 minutes ago

“திராவிட கோட்டையில் ஓட்டை”… 108 இடங்களுடன் தமிழகத்தை அதிரவைக்கும் தளபதி – உத்தேச அமைச்சரவையில் இத்தனை மாற்றங்களா…?

தமிழக சட்டசபைத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு…

20 minutes ago

ரீல்ஸ் மோகம்…!யமனின் பிடியில் 16 மணி நேரம்…! தண்ணீர் தொட்டி உச்சியில் சிக்கிய இளைஞர்கள்.. விமானப்படையின் அதிரடி மீட்பு…!

உத்தர பிரதேச மாநிலம் சித்தார்த் நகரில், சமூக வலைதளங்களில் பிரபலமடைய 'ரீல்ஸ்' எடுக்க முயன்ற இளைஞர்களின் முயற்சி விபரீதத்தில் முடிந்தது.…

24 minutes ago