Categories: சினிமா

நாடகத்தில் பயன்படுத்திய பொருட்களை எல்லாம் தீயிட்டுக் கொளுத்திய நடிகர் RS மனோகர்… ஷாக் ஆகி MGR செய்த செயல்!

Spread the love

தமிழ் சினிமாவில் ஆரம்ப கால நடிகர்கள் அனைவரும் நாடக உலகின் பின்னணியில் இருந்து வந்தவர்கள். அதில் எம் ஆர் ராதா, எம் ஜி ஆர், சிவாஜி, ஆர் எஸ் மனோகர், எஸ் எஸ் ராஜேந்திரன் என பலரும் அடக்கம். இதனால் அவர்கள் சினிமாவில் முன்னணிக்கு வந்தாலும் தங்களுக்கென ஒரு நாடகக் குழுவை நடத்தி வந்தனர்.

இப்படி எம் ஜி ஆர் நாடகக் குழு, சிவாஜி நாடகக் குழு என தனித்தனியாக நாடகக் குழுக்கள் இயங்கி வந்தன. இப்படி அவர்கள் மேடையேற்றிய சில நாடகங்கள் பெற்ற அபரிமிதமான வெற்றிக் காரணமாக அவை திரைப்படமாகவும் ஆக்கப்பட்டன. தங்கப்பதக்கம் படமெல்லாம் நாடக உலகில் இருந்து வந்ததுதான்.

ஆனால் நாடக உலகு கொஞ்சம் கொஞ்சமாகப் பொலிவை இழக்க ஆரம்பித்த காலத்தில் நாடகக் குழுவை சமாளிக்க முடியாமல் கைவிட்டனர். இதில் பெரும் பொருளாதார பின்னணியில் இருந்த எம் ஜி ஆர், சிவாஜி கூட தங்கள் குழுக்களைக் கலைத்துவிட்டார்களாம்.

ஆனால் RS மனோகர் மட்டும் எவ்வளவு கஷ்டம் வந்த போதும் தன்னுடைய நாடகக் குழுவை எப்படியாவது நடத்த வேண்டுமென ஆசைப்பட்டு நடத்தி வந்துள்ளார். ஆனாலும் ஒரு கட்டத்தில் அவராலும் குழுவை சமாளிக்க முடியாமல் அந்த குழுவில் இருந்தவர்கள் எல்லாம் பிரிந்து செல்ல ஆரம்பித்தார்களாம். இதனால் விரக்தியடைந்த மனோகர் நாடகத்துக்குப் பயன்படுத்திய பொருட்களை எல்லாம் தீயிட்டுக் கொளுத்திவிட்டு, இனிமே நான் நாடகத்திலேயே நடிக்க மாட்டேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது எம் ஜி ஆரின் காதுக்கு செல்ல, அவர் அதிர்ச்சியாகி மனோகரை அழைத்து “ஏன் இப்படி செய்தீர்கள். உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் நான் செய்கிறேன். நீ தொடர்ந்து நாடகக் குழுவை நடத்து” எனக் கூறி வேண்டிய உதவிகளையும் செய்துள்ளார். அதன் பின்னர் பல நாடகங்களை நடத்தினார் மனோகர். அப்போது ஒரு நாடகத்தில் கலந்துகொண்டு எம் ஜி ஆர் பேசும்போது “நாடகக் காவலர் “ என்ற படத்தை மனோகருக்கு வழங்கினார்.

 

vinoth

Recent Posts

“வினாடிக்கு ஒரு கால்… பெண் ஊழியருக்கு ‘டெக்னிக்கல்’ டார்ச்சர்”… டிசிஎஸ்-ஸில் அதிர்ச்சி… அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் உண்மை …!

நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில், பெண் ஊழியர் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்…

1 minute ago

யார் அந்த கருப்பு ஆடு?…”ஜெயிச்சா மந்திரி.. தோத்தா காலி!”… நள்ளிரவில் பறந்த “கடைசி” போன் கால்… மா.செ.க்களுக்கு எடப்பாடி வைத்த மரண செக்…!

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளுக்கு விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை அரசியல்…

7 minutes ago

இனி ஒரு சொட்டுத் தண்ணீர் கூடப் போகாது?…. தண்ணீர் இல்லாமல் கதறும் பாகிஸ்தான்… இந்தியா கொடுத்த ‘மரண அடி’…!

பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவிடும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 1960-ம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர்…

15 minutes ago

“கனடா சென்றால் செட்டில் ஆகலாம்..!” கனவுடன் சென்ற இந்தியப் பெண்ணுக்கு நேர்ந்த கதி… கலங்க வைக்கும் பதிவு….!

கனடா கனவுத் தேசமாகத் தெரிந்தாலும், அங்கு நிலவும் எதார்த்த சூழல் பல இந்திய இளைஞர்களைத் திக்குமுக்காடச் செய்துள்ளது. இதற்குச் சான்றாக,…

21 minutes ago

“பணத்தை வாங்கிட்டு இப்படி பண்றாங்களே”… எடப்பாடியிடம் கதறிய குஷ்பு… அடுத்த நிமிடம் நடந்த அதிரடி….!

மதுரை மத்திய தொகுதியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் தேர்தல் கள நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நடிகை குஷ்பு…

28 minutes ago

“நான் சாகல.. உயிரோடுதான் இருக்கேன்…” பிணமாக நடித்து முதியவர் நடத்திய நூதனப் போராட்டம்… உறைய வைக்கும் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…

1 மணத்தியாலம் ago