Categories: CINEMA

என் குழந்தை அப்படி ஒன்னும் இறக்கவில்லை.. 3 வயது மகனின் மரணம் குறித்து உருக்கமாக பேசிய பிரகாஷ்ராஜின் முதல் மனைவி..!

பிரகாஷ்ராஜின் முதல் மனைவியான லலிதா ராஜகுமாரி ஒரு பேட்டியில் தனது மகனின் இறப்பு குறித்து பேசி இருக்கின்றார். அந்த வீடியோ தற்போதைய இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் லலிதா. அதனைத் தொடர்ந்து மாப்பிள்ளை, புலன்விசாரணை, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் பிரபல கவர்ச்சி நடிகையான டிஸ்கோ சாந்தியின் தங்கை ஆவார். நடிகர் பிரகாஷ் ராஜும், லலிதாவும் 1994 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமாகி 16 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். சிறந்த தம்பதிகளாக வளம் வந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக 2009 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிறந்தன. நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ் சினிமாவில் பிரபல வில்லனாக வலம் வந்தவர். தமிழ்மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் சிறந்த நடிகராக வலம் வருகிறார்.

இவர் தனது மனைவி லலிதாவை விவாகரத்து பெற்று பிரிந்த பிறகு 2-வதாக அவர் திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தையை பெற்றிருக்கின்றார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வந்த லலிதா குமாரி ஒரு பேட்டி ஒன்றில் தன் வாழ்வில் நடந்த பல விஷயங்களைப் பற்றி பேசியிருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது நான் வெளிநாட்டில் இருந்து சினிமாவிற்கு வரவில்லை, எனது அப்பா விஜயபுரி ஆனந்தன்.

இவர் கதாநாயகனாக பலப்படங்களில் நடித்திருக்கின்றார். என் குடும்பம் சினிமாவில் இருந்தாலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வரவில்லை. ஒரு முறை பாலச்சந்திரனுக்கு வாழ்த்து சொல்வதற்கு தங்களது குடும்ப போட்டோவை அனுப்பி இருந்தோம். அதை பார்த்த அவர் என் பெரிய அக்காவை நடிக்க கூப்பிட்டார். அப்போது அவருக்கு திருமணமான காரணத்தினால் அடுத்ததாக என்னை அழைத்தார்.

நான் அப்போது ஒன்பதாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தேன். சினிமாவில் நடிக்க எனக்கு ஆசையே இல்லை. பிரகாஷ்ராஜ் கீதா மேடம் மூலமாக பாலச்சந்திரன் பார்க்க வைத்தார். அப்போதுதான் முதன்முதலாக நான் பிரகாஷ்ராஜை பார்த்தேன். அப்போது பழகி மூன்று மாதத்தில் தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது. டூயட் படம் முடிந்ததும் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு பூஜா, மேக்னா என்று இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

#image_title

16 வருடம் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தோம் எங்களுக்குள் சிறிய விரிசல் ஏற்பட்டது இருவருமே உட்கார்ந்து பேசி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். இந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்ததுதான் எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். ஆனால் 3 வயது இருக்கும் போது எனது மகன் இறந்துவிட்டான். சோகத்திலேயே மிகப்பெரிய சோகம் புத்திர சோகம் தான் என்னால் அந்த சம்பவத்திலிருந்து மீண்டு வர முடியவில்லை.

எனது குழந்தை நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்து விட்டதாக பலரும் கூறினார்கள். ஆனால் அது உண்மை கிடையாது. ஒரு சிறிய தொட்டி ஒன்று இருந்தது. அதற்கு மேல் நின்று எனது மகன் பட்டம் விட்டு கொண்டு இருந்தான். அப்போது கால் தவறி அந்த தொட்டிக்குள் விழுந்து நெற்றியில் மிகப்பெரிய அடிப்பட்டது. பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்தோம். சிறிது வீக்கம் தான் ஒன்றும் இல்லை என்று கூறி விட்டார்கள். அதை தொடர்ந்து ஒரு மாதத்திற்குள் ஒரு காய்ச்சல் வந்தது.

பின்னர் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றோம் இரண்டாவது முறை காச்சல் வரும்போது அவருக்கு பிக்ஸ் வந்துவிட்டது. இதில் அவர் உயிரிழந்து விட்டார், இந்த சோகம் என்னை மிகப் பெரிய அளவில் பாதித்தது. விவாகரத்து பெற்ற பிறகு மிகப்பெரிய மன அழுத்தத்தில் இருந்தேன். எனது மகள்கள் என் கூட இருந்து என்னை தேற்றினார்கள். இதுதான் என் வாழ்க்கை என்று முடிவு செய்து விட்டேன். இந்த உலகத்திற்கு தனியாகத்தான் வந்தோம், தனியாகத்தான் போகின்றோம் இடைப்பட்ட எந்த உறவும் நிரந்தரமல்ல என்பதை புரிந்து கொண்டேன்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

8 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

9 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago