CINEMA
இதெல்லாம் நமக்கு தேவையா புரோ… சத்தம் இல்லாமல் லவ் டுடே பிரதீப் செய்த வேலை… கடைசியில இப்படி ஆயிடுச்சே..!!
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவில் நுழைந்தவர் தான் பிரதீப் ரங்கநாதன். அதற்கு முன்பு இவர் சில குறும்படங்கள் இயக்கியுள்ளார். கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதிப் ரங்கநாதன் தனது முதல் திரைப்படத்திலேயே சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து அசத்தினார். அதன் பிறகு திடீரென ஹீரோவாக நடிக்க போவதாக அவர் அறிவித்திருந்தார். இதற்கு தேவையற்ற வேலை என்று பலரும் கூறி வந்தனர்.
ஆனால் ஏஜிஎஸ் தயாரிப்பில் அவர் இயக்கிய நடித்த லவ் டுடே திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. கோலிவுட்டில் எமர்ஜிங் ஹீரோவாகவே பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார் என்று கூறலாம். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் சில திரைப்படங்கள் இயக்குவதாக பிரதீப் ரங்கநாதன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.வெறும் ஐந்து கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 70 கோடிக்கு மேல் வசூல் செய்து அமோக வெற்றி பெற்றது.
இந்த நிலையில் புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு பிரதீப் ரங்கநாதன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். இந்த படத்திற்கான வேலைகள் தற்போது தொடங்கியுள்ள நிலையில் பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய முகம் அழகாக மாற வேண்டும் என்பதற்காக நிறம் மாற வேண்டும் என்ற எண்ணத்தில் சில சிகிச்சைகளை செய்ததாக சொல்லப்படுகிறது. சினிமாவில் தற்போது இது போன்ற சிகிச்சைகளை பலரும் செய்யத் தொடங்கி விட்டனர்.
ஆனால் பிரதீப்புக்கு இது செட் ஆகாமல் முகம் வெள்ளையாக மாறி வெளுத்துப் போய்விட்டது. அவரைப் பார்த்த எல்லோருமே என்ன பிரதர் வெள்ளைக்காரன் மாதிரி இருக்கீங்க என கேட்க தொடங்கியுள்ளனர். இதயத் தோற்றத்துடன் விக்னேஷ் சிவன் படத்தில் அவர் நடிப்பாரா இல்லை மீண்டும் ஏதாவது சிகிச்சை செய்து தனது முகத்தை மாற்றிக் கொள்வாரா என தெரியவில்லை.