#image_title
தெகிடி, மேயாத மான் உள்ளிட திரைப்படங்களில் நடித்த பிரதீப் விஜயன் வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு மிர்ச்சி சிவா வசுந்தரா ஆகியோர் நடிப்பில் வெளியான சொன்னா புரியாது என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர்தான் பிரதீப் கே விஜயன். பின்னர் பல திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார். தொடர்ந்து தெகிடி திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை கொடுத்தது.
அதன் பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஒரு நாள் கூத்து, என்னோடு விளையாடு, மீசையை முறுக்கு, மேயாத மான், நெஞ்சில் துணிவிருந்தால், திருட்டுப் பயலே 2, இரும்புத்திரை, ஆடை, கென்னடி கிளப் ,ஹீரோ, மனம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். கடைசியாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த ருத்ரன் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.
பி.டெக் பட்டதாரியான இவர் நடிப்பை தாண்டி பல படங்களுக்கு சப் டைட்டில் போட்டு கொடுக்கும் பணியையும் செய்து வந்தார். சினிமா மீது இருந்த ஆர்வம் காரணமாக தன்னை ஒரு நடிகராக மாற்றிக்கொண்டார். சென்னை பலாவாக்கத்தில் தனியாக வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக அவரது நண்பர்கள் இவருக்கு போன் செய்த நிலையில் போனை அவர் எடுக்கவில்லை.
பின்னர் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று கலவை தட்டிப் பார்த்தபோது கதவு உள்பக்கம் தாப்பாழ் போடப்பட்டிருந்தது. மேலும் துர்நாற்றம் அதிகமாக வந்ததால் காவல்துறையினருக்கு அவரது நண்பர்கள் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தபோது இறந்த நிலையில் பிரதீப் கே விஜயன் கிடந்துள்ளார்.
அவர் மாரடைப்பு காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது . இருப்பினும் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனையில் தான் இவருக்கு என்ன நடந்தது என்பது தெரிய வரும். இரண்டு நாட்களாக வீட்டுக்குள் இறந்து கிடந்த இவரது உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…