செம கியூட்…! சிவப்பு நிற புடவையில் அழகாக ஜொலிக்கும்….. நடிகை பூர்ணாவின் வளைகாப்பு நிகழ்ச்சி புகைப்படங்கள் இதோ….!!!

By admin

Updated on:

நடிகை பூர்ணா தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் சில படங்களில் மட்டுமே நடித்து பிரபலமானவர். இவர் 2008 ஆம் வருடம் தமிழில் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் நூற்றாண்டு என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு கந்தகோட்டை, தகராறு, காப்பான், தலைவி, ஆடுபுலி போன்ற படங்களில் நடித்தார்.

   

அதன் பிறகு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை என்றாலும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வந்தார்.

கேரளாவைச் சேர்ந்த இவர் 2010 களின் நடுப்பகுதியில் தொடர்ச்சியான படங்களில் நடித்தார்.

அவுனு மற்றும் அதன் தொடர்ச்சியான அவனு 2 ஆகிய திகில் படங்களில் நடித்து பிரபலமானார்.

இதனையடுத்து தி இந்து அவரை தெலுங்கு படங்களின் பேய் ராணி என்று முத்திரையை குத்தியது.

அதன் பின்னர் 2017 ஆம் வருடம் தமிழில் கொடிவீரன் திரைப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்காக அவருடைய தலையை காயப்படுத்தினார்.

இருப்பினும் திரைப்படம் பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெறவில்லை.

2021 ஆம் வருடம் வெளிவந்த தலைவி படத்தில் இவர் வி.கே சசிகலாவாகவும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் கடந்த வருடம் துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான ஷானித் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வீடியோவை தனது யூடியூப் சேனல் மூலம் பகிர்ந்து நவம்பர் மாதம் அறிவித்தார் பூர்ணா.

அதன் பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தான் கர்ப்பமாக இருப்பதை குடும்பத்தோடு அறிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவ்வாக இருக்கும் இவர் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் குடும்பத்தினர் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

 

இந்த நிலையில் சமீபத்தில் பூர்ணாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களிஇல் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்ஸ் நடிகை பூர்ணாவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வளைகாப்பு விழாவில், பூர்ணாவின் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.

நடிகை பூர்ணாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

தன்னுடை வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகை பர்னா பளபளக்கும் சிவப்பு  பட்டு புடவையில் அதற்க்கு ஏற்ற போல் தங்கநகைகள் அணிந்து, அழகு தேவதை போல் ஜொலிக்கிறார்.