#image_title
நடனம், நடிப்பு, இயக்கம் என இந்தியா முழுவதும் இன்றளவில் அசத்தி வருபவர் நடிகர் பிரபுதேவா. ‘இந்தியன் மைக்கேல் ஜாக்சன்’ என ரசிகர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறார். தமிழில் திரைப்படத்தில் முதலில் நடன கலைஞராக அறிமுகமானார். பின்னர் 1989ல் வெளியான ‘இந்து’ திரைப்படத்தில் நடிகை ரோஜாவுக்கு ஜோடியாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இவர் நடிப்பில் வெளியான ‘காதலன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானது. நடிகர் பிரபுதேவா நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் வலம் வந்தார். இவர் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
தமிழில் மட்டுமல்லாது ஹிந்திலும் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். பிரபுதேவா தனது டான்ஸ் குரூப்பில் டான்சராக ஆக பணியாற்றி வந்த ரமலத் என்பவரை காதலித்து 1995 ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் 2011 இல் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.
இவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தார்கள். அதில் ஒருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். தனது முதல் மனைவியை 2011ல் விவாகரத்து செய்த பிரபுதேவா பின்னர் பல பிரபலங்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். இதன்பின்னர் இவர் மருத்துவர் ஒருவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்துள்ளார். ஆம் இவர் முதுகுவலி காரணமாக சில வருடங்கள் அவதிப்பட்ட நிலையில், பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் ஒருவர் இவருக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
அவர் மீது காதல் ஏற்பட்ட நிலைியல் இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர்களுக்கு ஒரு கைக்குழந்தையும் உள்ளது. சினிமாவில் பிசியாக இருக்கும் நடிகர் பிரபுதேவா தற்பொழுது தனது மனைவி, கைக்குழந்தை, அம்மா, அப்பா என மொத்த குடும்பத்துடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. பாரம்பரியமிக்க திமுக, அதிமுக ஆகிய இருபெரும்…
தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில், தவெக சட்டமன்ற உறுப்பினர்களை (எம்.எல்.ஏக்கள்) விலைக்கு…
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்…
தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநில அரசியல் களம் தினமும் ஒரு பரபரப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு…
கரூர் மரணங்கள் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தை நாட திமுக தலைமை…