‘பாகுபலி’ படத்தில் மிரட்டிய நடிகர் பிரபாஸ்- ஆ இது?… உங்களுக்கு என்ன ஆச்சு?… போட்டோவை பார்த்து பதறும் ரசிகர்கள்…

By Begam

Updated on:

பாகுபலி என்ற படத்தின் மூலம் இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்திற்க வந்தவர் நடிகர் பிரபாஸ். அப்படம் அவருக்கு கொடுத்த பிரபலம், அதன்பிறகு அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே Pan India படமாகவே இருக்கிறது. ஆனால் சரியான வெற்றி தான் அவருக்கு கிடைக்கவில்லை, சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் படம் அந்த அளவிற்கு வசூல் வேட்டை நடத்திவில்லை, மாறாக நிறைய சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

   

பிரபாஸ் ஒரு படத்திற்கு சுமார் ரூ. 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இவர் தெலுங்கு திரையுலகில் பிரபலமான முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர். தற்பொழுது இவர் நடிப்பில் வெளியாகவுள்ள ‘சலார்’ திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் பிரபாஸின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் வழுக்கை தலையுடன் இருக்கும் பிரபாஸை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.ஆனால், அது உண்மையான புகைப்படம் இல்லை. பிரபாஸின் ஹெட்டர்ஸ் போட்டோஷாப் செய்து இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதோ உண்மையான புகைப்படம்…