#image_title
ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். 1984 ஆம் ஆண்டு இயக்குனர் கே பாக்யராஜ் இடம் உதவி இயக்குனராக தனது கேரியரை தொடங்கினார் பார்த்திபன். 1984 முதல் 1991 வரை 20 படங்களுக்கு மேல் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார்.
பதினாறு படங்களை இயக்கி 14 படங்களை தயாரித்து கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் பார்த்திபன். இவரது தமிழ் உச்சரிப்புக்காகவே பல ரசிகர்கள் இருக்கின்றனர். பாரதி கண்ணம்மா நீ வருவாய் என வெற்றிக் கொடி கட்டு ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்கள் பார்த்திபன் நாடித்தவைகளில் குறிப்பிடதகுந்தவை ஆகும்.
இந்நிலையில் நேற்று நடிகர் பார்த்திபன் அவரது அலுவலகத்தில் இருந்த 12 சவரன் நகையை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதற்கான விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று அந்த புகாரை வாபஸ் செய்து இருக்கிறார் பார்த்திபன். அது எதற்காக என்பதை பற்றி இனி காண்போம்.
நடிகர் பார்த்திபனின் ஆபீஸில் ஆறு ஊழியர்கள் பணியில் இருந்ததிருக்கின்றனர். அவர்களிடம் தனித்தனியாக விசாரித்த போது அதில் ஒரு ஊழியர் ஆன கிருஷ்ண காந்த் என்பவர் பார்த்திபனின் நகையை திருடி இருக்கிறார். திருடிய நகையை அவர் பார்த்திபன் அவர்களிடம் திருப்பி ஒப்படைத்து மன்னிப்பு கேட்டு மேல நடவடிக்கை வேண்டாம் என்று கேட்டதால் இன்று புகாரை வாபஸ் செய்து இருக்கிறார் பார்த்திபன். இப்படி ஒரு ட்விஸ்ட் நடந்தது காவல்துறையே எதிர்பார்க்கவில்லை.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…