என் வருங்கால மனைவி ஷூட்டிங் பக்க வரும்போது நான் நெருக்கமான காட்சியில்.. அதிர்ச்சி கொடுத்த நிழல்கள் ரவி..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் ‘நிழல்கள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ரவி. இப்படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இதனால் இப்படத்திற்கு பிறகு ‘நிழல்கள் ரவி’ என்று அழைக்கப்பட்டார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் தர்மதுரை, நாயகன் போன்ற பல படங்கள் வெளியாகின. எப்படி பாரதிராஜாவின் அறிமுகங்கள் யாருமே சோடை போனதில்லையோ அதுபோல நிழல்கள் ரவி 45 ஆண்டுகளாக இப்போது வரை நடித்து வருகிறார்.

ஹீரோவாக நடித்த நிழல்கள் ரவி, பல குணச்சித்திர கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. கே ஜி எஃப் படத்தில் பிரபல கதாபாத்திரம் ஒன்றுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்துள்ளார்.கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

   

சமீபகாலமாக நிழல்கள் ரவியை இயக்குனர் நகைச்சுவை நடிகராக ஒரு புதிய பரிணாமத்தில் காட்டி வருகின்றனர். அவர் நகைச்சுவையாக நடித்த டிக்கிலோனா மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றி பெற்றன. இதனால் இனிமேல் நகைச்சுவை வேடங்களில் தொடர்ந்து நடிக்க வுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “அப்போது எனக்கு திருமணம் நிச்சயம் ஆகியிருந்தது. நான் ஆழ்வார்பேட்டையில் ஒரு வீட்டில் ஷூட்டிங்கில் இருந்தேன். அப்போது என்னைப் பார்க்க என் மனைவியின் குடும்பத்தினர் அனைவரும் வந்துவிட்டனர்.

அப்போது பார்த்து நான் ஒரு பெண்ணை ரேப் செய்வது போன்ற காட்சியை இயக்குனர் படமாக்கிக் கொண்டிருந்தனர். என் வருங்கால மனைவி முதல் முதலாக நான் நடிப்பதைப் பார்க்க வந்த போது நான் ரேப் காட்சியில் நடித்துக்கொண்டிருந்தேன். அது மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. ஆனால் என் மனைவியும் அவர் குடும்பத்தினரும் படித்தவர்கள் என்பதால் அவர்கள் அதைப் புரிந்துகொண்டார்கள்” எனக் கூறியுள்ளார்.