![winner - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/06/winner.jpg)
CINEMA
காசு கொடுத்தும் வாங்க மறுத்த நம்பியார்.. அந்த வயசுலையும் எவ்வளவு டெடிகேஷனா இருந்துருக்காரு பாருங்களே..!
பிரபல நடிகரான நம்பியார் படத்தை முடிக்காமல் பணம் வாங்க மாட்டேன் என்று அடம் பிடித்த சம்பவத்தை தயாரிப்பாளர் முருகன் தனது பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார். தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துவிட்டு பந்தா காட்டுவது, ஒரு படம் ஹிட்டானாலே போதும் அடுத்த படத்திற்கு சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி விடுவது என நடிகர்கள் சீன் போட்டு வரும் இந்த காலத்தில் இயக்குனரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஒரு பள்ளி மாணவரை போல படத்தில் நடித்துக் கொடுத்த நடிகர்கள் எல்லாம் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவ்வளவு தூரம் தனது தொழிலில் பக்தியாக இருந்த நடிகர் தான் நம்பியார். தமிழ் சினிமாவில் பி எஸ் வீரப்பாவிற்கு பிறகு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியவர் நம்பியார். எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருடன் சரி சமமாக சண்டை போட்டு தனி ஒரு வில்லனாகவே மாற்றிக் கொண்டவர். ஆனால் நிஜத்தில் அவர் மிகவும் சாதுவான மனிதர் இவர் வின்னர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தில் பிரசாந்த், வடிவேலு, கிரண் ஆகிய பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்தின் நடித்துக் கொண்டிருந்த போது நம்பியாருக்கு மிகவும் வயது அதிகம். வின்னர் திரைப்படத்தில் பல சிக்கல்களை தாண்டி அவர் எப்படியோ நடித்து முடித்து விட்டார். அப்படத்தில் நடிகர் நம்பியாருக்கு பணம் செட்டில் பண்ண வேண்டியிருந்தது. மேலும் நம்பியாரின் டப்பிங் பணிகள் நிறைவடையாமல் இருந்த காரணத்தினால் தயாரிப்பாளர் நம்பியாரை சந்தித்து சம்பள பாக்கியம் கொடுத்து விட்டு டப்பிங் வருமாறு கூறியிருந்தார்.
ஆனால் நம்பியார் கொடுத்த பணத்தை வாங்காமல் ஊட்டிக்கு செல்கிறேன், சென்று வந்த பிறகு டப்பிங் முடித்துவிட்டு மீதி சம்பளத்தை வாங்கிக் கொள்வதாக கூறியிருந்தார். பரவாயில்லை பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று தயாரிப்பாளர் கூற இல்லை நாளை நான் பணத்தை வாங்கிக் கொண்டு டப்பிங் பேசாமல் ஓடிவிட்டேன் என்று கூறுவதற்காக..? வேண்டாம் என்று தெரிவித்துவிட்டு வாங்க மறுத்துவிட்டார்.
உடனே தயாரிப்பாளர் அவரிடம் வற்புறுத்தி டப்பிங் மட்டும் செய்து கொடுத்து விட்டு செல்லுமாறு கேட்க அதற்கு ஒப்புக்கொண்ட நம்பியார் ஒரு கண்டிஷன் போட்டார். எனக்கு மாலை வேலையில் சரியாக கண்ணு தெரியாது. நீங்கள் நான்கு மணிக்கு கார் அனுப்பி வையுங்கள். டப்பிங் முடித்துவிட்டு ஆறு மணிக்கு வீட்டு திரும்பி விடுகிறேன். தாமதிக்க வேண்டாம் என்று கூறி பணத்தையும் வாங்கிக் கொண்டார்.
உடனே அலுவலகத்திற்கு வந்த தயாரிப்பாளர் 4 மணிக்கு நம்பியார் வீட்டுக்கு கார் அனுப்பும்படி கூறி இருக்கின்றார். ஆனால் அலுவலகத்தில் இருந்தவரோ மறந்து விட்டார். இந்த செய்தியை தெரிந்த தயாரிப்பாளர் உடனே காரை எடுத்துக்கொண்டு அவரது வீட்டிற்க்கே சென்று விட்டாராம். ஆனால் நடிகர் நம்பியார் வீட்டு வாசலிலேயே குடைப்பிடித்தபடி அமர்ந்திருக்கின்றார்.
இதை பார்த்த தயாரிப்பாளர் எதற்கு இப்படி உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு உள்ளே சென்றுவிட்டால் நான் தூங்கிவிட்டேன். தூங்கிவிட்டால் என்னால் எழுந்திருக்க முடியாது என்று சொல்லி அங்கேயே அமர்ந்திருந்தார். பின்னர் அவரை அழைத்து வந்து டப்பிங் பணியை முடித்துவிட்டு மாலை 7 மணிக்கு வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார்களாம். பணத்தை வாங்கி விட்டதால் தனது தொழிலை சுத்தமாக செய்து விட வேண்டும் என்று மிகவும் சிரமப்பட்டு அதனை செய்திருக்கின்றார் நடிகர் நம்பியார்.