#image_title
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒன்றே ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உண்டு. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு நடிகர் கோலோச்சுவார். அவருக்கு பின் ஒருவர் வர முன்னணில் இருந்தவரின் மார்க்கெட் காலியாகும். அப்படி சந்திரபாபுவுக்கு அடுத்து முன்னணி நகைச்சுவை நடிகராக வந்தவர் நாகேஷ்.
தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான உடல்மொழி மற்றும் நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள் மூலமாகக் கலக்கியவர் நாகேஷ். 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அவரை தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் என்றும் சொல்வர். கவுண்டமணி வருகைக்குப் பிறகும் பல படங்களில் நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
ஒரு கட்டத்தில் தனக்கு மார்க்கெட் குறைய ஆரம்பித்த போது தனது மகன் ஆனந்த் பாபுவை கதாநாயகனாக்கினார். பல படங்களில் நடித்த ஆனந்த் பாபுவுக்கு சரியான வெற்றிப்படம் அமையவில்லை. அதனாஅல் தானே அவரை வைத்து ஒரு படத்தை இயக்கலாம் என்ற முடிவை எடுத்தார்.
அப்படி அவர் இயக்கத்தில் உருவான திரைப்படம்தான் பார்த்த ஞாபகம் இல்லையோ. ஆனந்த் பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் இந்த பத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானாலும் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
இந்த படத்தில் தற்போதைய பிரபல இயக்குனரான கே எஸ் ரவிக்குமார் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். தன்னுடைய ஐம்பது ஆண்டுகால திரைவாழ்க்கையில் நாகேஷ் இயக்கிய ஒரே ஒரு திரைப்படம் இதுதான்.
சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…
மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…
சர்வதேச அரசியல் மேடையில் அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான உறவு மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, வெனிசுலாவின்…
சிரிப்புக்கும் குதூகலத்திற்கும் பெயர்போன 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, தற்போது சர்ச்சைகளுக்கும் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் களமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்…
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…
தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…