Connect with us

நீ மட்டும் படம் கொடுக்கலன்னா தற்கொலை பண்ணிப்பேன்… மிரட்டி மோகனிடம் சான்ஸ் வாங்கிய பிரபலம்!

CINEMA

நீ மட்டும் படம் கொடுக்கலன்னா தற்கொலை பண்ணிப்பேன்… மிரட்டி மோகனிடம் சான்ஸ் வாங்கிய பிரபலம்!

 

தமிழ் சினிமாவில் 80 களில் தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்து வெள்ளி விழா நாயகனாக வலம் வந்தவர் மோகன். பல படங்களில் பாடகராக இவர் தோன்றி நடித்ததால் இவரை ரசிகர்கள் செல்லமாக மைக் மோகன் என்றே அழைத்து வந்தனர்.

கர்நாடகாவைப் பூர்விகமாகக் கொண்ட மோகனை பாலு மகேந்திரா தன்னுடைய கோகிலா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார். அந்த படம் தமிழ் நாட்டிலும் நன்றாக ஓடிய நிலையில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். அவரின் மூடுபனி, பயணங்கள் முடிவதில்லை, கிளிஞ்சல்கள்,  நூறாவது நாள், மௌன ராகம் உள்ளிட்ட ஏராளமான படங்கள் வெள்ளிவிழாக் கண்டன. அதனால் ரஜினி, கமலுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக விளங்கினார்.

   

ஆனால் 90 களுக்குப் பிறகு அவருக்கான மார்க்கெட் குறைய ஆரம்பித்தது. அதனால் 90 களில் இருந்து அவர் அதிகமாக படங்களில் நடிக்கவே இல்லை. இப்போது ஹரா மற்றும் தி கோட் ஆகிய படங்களின் மூலம் ரி எண்ட்ரி கொடுக்கிறார்.

#image_title

இப்போது தன்னுடைய சினிமா வாழ்க்கையின் பல மலரும் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். அதில் தன்னுடைய நெருங்கிய நண்பரான மனோபாலாவோடு இணைந்து பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “அப்போது மனோபாலா ஒரு படம் பண்ணி அது தோல்விப் படமாக அமைந்தது. அதனால் அவருக்கு வேறு படம் கிடைக்கவில்லை.

அப்போது என்னிடம் வந்து “நீ எனக்கு ஒரு படம் குடுடா. எவனும் கூப்புட மாட்றான். இப்ப செலவுக்காவது காசு குடு” என சொல்லி பாக்கெட்டில் இருந்து பணம் எடுத்து செல்வான். அந்த அளவுக்கு எங்களுக்குள் நட்பு இருந்தது. ஒரு நாள் திடீரென்று “நீ படம் கொடுக்கலன்னா நான் தற்கொலை செஞ்சிப்பேன்” என சொல்லிவிட்டு போய்விட்டான். எனக்கு அப்போது சங்கடமாக இருந்தது.

அதன் பிறகுதான் நாங்கள் இணைந்து பிள்ளை நிலா என்ற படமெடுத்தோம். அது வெற்றிப்படமாக அமைந்தது. மனோபாலா நல்ல திறமையான இயக்குனர். அவர் இப்போது நம்மிடையே இல்லை என்பது வருத்தமான விஷயம்” எனக் கூறியுள்ளார்.

Continue Reading
To Top