Categories: சினிமா

இளையராஜாவோடு சண்டை போட்டு பிரிவு… அந்த ஒரு பாட்டைக் கேட்டு பேப்பரை வீசியெறிந்த வைரமுத்து… அப்ப சொன்ன அந்த ஒரு வார்த்தை!

Spread the love

தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால் அதற்கான வாய்ப்பு ஒரு சதவீதம் கூட இல்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அவர்கள் இணைந்து பணியாற்றியது வெறும் ஆறே ஆண்டுகள்தான் என்ற போதும் அவர்கள் உருவாக்கிய பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தால் அழியாதவை.

1980 ஆம் ஆண்டு இருவரும் நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலின் மூலம் இணைந்தார்கள். அதன் பிறகு இருவருக்கும் இடையிலான நட்பு அதிகமாகி அடுத்தடுத்த ஆண்டுகளில் இளையராஜா இசையில் அதிக பாடல்கள் எழுதியவராக இருந்தார். ஆனால் இந்த கூட்டணி ஒரு கட்டத்தில் பிரிந்தது.

அதற்குக் காரணம் இருவருக்கும் இடையிலான படைப்பு ரீதியிலான கருத்து வேறுபாடுதான் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு 35 ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றி வந்தாலும் இணைந்து ஒரே ஒரு பாடல் கூட பணியாற்றவில்லை. பலரும் அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்த போதும் அது நடக்கவில்லை.

வைரமுத்துவாவது பொது மேடைகளிலோ அல்லது பழைய பாடல்கள் பற்றி பேசும்போதே இளையராஜாவின் பெயரைக் குறிப்பிடுவார். ஆனால் இளையராஜா அவர்கள் பிரிவுக்குப் பிறகு வைரமுத்து பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசியதில்லை. இந்நிலையில் மறைந்த நடிகர் மாரிமுத்து இவர்கள் பிரிவு மற்றும் இளையராஜா மேல் வைரமுத்து வைத்திருந்த மதிப்புப் பற்றி ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.

#image_title

அந்த நேர்காணலில் “வைரமுத்து இளையராஜாவை விட்டு பிரிந்த பிறகு பாக்யா பத்திரிக்கையில் ‘இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள்” என்று ஒரு தொடர் எழுதினார். அப்போது நான் அவரிடம் உதவியாளராக இருந்தேன். அதில் ஒவ்வொருத்தரைப் பற்றியும் ஒவ்வொரு அத்தியாயம் எழுதி வந்த போது இளையராஜா பற்றிய அத்தியாயம் எழுத வேண்டிய நாள் வந்தது.

அப்போது அவர் மொட்டை மாடியில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தார். அப்போது எங்கோ தூரத்தில் இளையராஜாவின் பாடலான “உள்ளுக்குள்ள சக்ரவர்த்தி” பாடல் ஒலித்தது. அதைக் கேட்டு எமோஷனலான வைரமுத்து, எழுதிக் கொண்டிருந்த பேப்பரை தூக்கியெறிந்து விட்டு “இவன எல்லாம் ஒன்னுமே பண்ண முடியாது. எத்தன வருஷம் ஆனாலும் இவன் மட்டும் இங்க இருப்பான்” என சொன்னார்.” என மாரிமுத்து அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

 

vinoth

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

1 மணத்தியாலம் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

1 மணத்தியாலம் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

2 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

2 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

2 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

2 மணத்தியாலங்கள் ago