ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனராக மறைந்த ‘எதிர்நீச்சல்’ நடிகர் மாரிமுத்து… இதுவரை பலரும் பார்த்திடாத UNSEEN புகைப்படங்கள்…

By Begam

Published on:

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வந்தவர் நடிகர் மாரிமுத்து. எதிர்நீச்சல் சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய ஆதி குணசேகரன் கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது.

   

குறிப்பாக ‘ஏமா ஏய்’ என்று இவர் கூறும் வசனம் மீம் ஆக மாறியது. இவர் 1994ஆம் ஆண்டு பாக்கியலட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்ட மாரிமுத்துவிற்கு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இந்நிலையில், நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து ஒருவரும் மீளவில்லை.

57 வயதாகும் இவருடைய மரணத்திற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தற்பொழுதும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தற்பொழுது எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

தற்பொழுது மாரிமுத்துவுக்கு பதில் தற்போது வேல ராமமூர்த்தி தான் ஆதி குணசேகரன் ரோலில் நடிக்கபோவதாக தகவல் பரவி வருகிறது. மறைந்த நடிகர் மாரிமுத்து நடிகர் மட்டுமல்ல இவர் ஒரு இயக்குனரும் கூட. இவர் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற இரண்டு படங்களை இயக்கியுள்ளார். மேலும் ‘யுத்தம் செய்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தற்பொழுது மறைந்த நடிகர் மாரிமுத்து இயக்குனராக ஷூட்டிங் ஸ்பாட்டின் போது எடுக்கப்பட்ட பலரும் பார்த்திடாத புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.