மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் மம்முட்டி. 70 வயதுகளை கடந்தும் இன்னும் ஹீரோவாக மலையாளத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மம்முட்டி கூறியதாவது, நான் வக்கீலுக்கு படித்தவன். ஆனால் சினிமா மேல் இருந்த ஆசையால் தான் இங்கு நடிக்க வந்தேன். ஆரம்பத்துல எனக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கலே. ஆனால் நான் ஒருபோதும் சோர்ந்து போகலே.
இன்னைக்கு நான் ஒரு பெரிய கார்ல போறேன்னா அது இந்த சினிமா எனக்கு போட்ட பிச்சை சோறு தான். நான் ஒரு நடிகனா இருக்கறதை விட ஒரு நல்ல மனுஷனா இருக்கணும்தான் ஆசைப்படுறேன். அதனால தான் கஷ்டப்படுறவங்களுக்கு என்னால முடிஞ்ச உதவிகளை ரகசியமா செஞ்சிட்டு இருக்கேன் என்று நடிகர் மம்முட்டி அதில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
