கவின் என்று அழைக்கப்படும் கவின்ராஜ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஆவார். சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரைக்கு சென்ற நடிகர்களில் இவரும் ஒருவர். விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரில் நடித்ததன் மூலம் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார் கவின்.பின்னர் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார். அடுத்ததாக 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்கப்பெற்ற கவின் சத்ரியன் நட்புன்னா என்னன்னு தெரியுமா டாடா ஆகிய படங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
டாடா திரைப்படம் கவினுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதற்கு அடுத்ததாக இவர் நடிப்பில் ஸ்டார் திரைப்படம் வெளியானது. தற்போது தீபாவளிக்கு கவின் நடித்த பிளடி பக்கர் திரைப்படம் வெளியாக தயாராக இருக்கிறது. அடுத்ததாக நயன்தாராவுடன் இணைந்து கவின் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இந்த நிலையில் கவின் சமீபத்தில் பிரபல youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் திரைப்படங்களுக்கான கதையை தான் எப்படி தேர்வு செய்கிறேன் என்பது குறித்து பேசி உள்ளார்.
அதில், இப்போதைக்கு படங்களின் கதை பற்றி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால் இதுவரை நான் ஒரு ஐந்து படங்களில் நடித்து விட்டேன். அடுத்ததாக மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளது. நான் அடுத்ததாக தேர்வு செய்யக்கூடிய கதை ஏற்கனவே நான் நடித்த படங்களின் கதையை சார்ந்ததாக இருக்கக் கூடாது. அவை ஒரு வித்தியாசமான கதையாக தான் இருக்க வேண்டும். ஒரே மாதிரியான கதையாக இருந்தால் மக்கள் விரும்ப மாட்டார்கள். கதையைக் கேட்டதும் நமக்கே ஒரு மாதிரி பீல் வரும். அது மாதிரி இருக்கிற கதையை தான் நான் தேர்வு செஞ்சு நடிச்சிட்டு இருக்கேன் என்று கவின் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…