![a 4 - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/05/a-4-2.jpg)
CINEMA
“கூட ஃப்ரண்டா நடிக்க ரெக்கமண்ட் பண்ணது மட்டுமில்ல… எனக்கு காரும் வாங்கிக் கொடுத்தார்”.. விஜய் பற்றி மலரும் நினைவுகளைப் பகிர்ந்த கில்லி பட நடிகர்..
சில நடிகர்கள் மட்டுமே ஒருசில காட்சிகளில் தோன்றினாலும் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பல துணை நடிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் கராத்தே ராஜாவும் ஒருவர். இவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பாக பள்ளிக்கூடங்களில் கராத்தே வகுப்பு நடத்தி வந்துள்ளார்.
இவருக்கு நல்ல அறிமுகத்தை வசூல் ராஜா எம்பிபிஎஸ் மற்றும் கில்லி ஆகிய திரைப்படங்கள் கொடுத்தன. கில்லி திரைப்படத்தில் முத்துப் பாண்டியன் அடியாளாக நூற்றுக் கணக்கானோர் வந்தாலும் இவரின் முகம் மட்டுமே ரசிகர்களுக்கு பரிச்சயமானது.
![vijay hh - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/05/vijay-hh.jpg)
#image_title
இதையடுத்து தொடர்ந்து படங்களில் நடித்த ராஜா விஜய்யோடு போக்கிரி, அழகிய தமிழ்மகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்நிலையில் இப்போது கில்லி படம் ரி ரிலீஸ் ஆகி எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் விஜய் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதில் “விஜய் சார்தான் எனக்கு போக்கிரி படத்தில் அவரின் நண்பராக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தார். இதைத் தயாரிப்பாளர்களே என்னிடம் சொன்னார்கள். எனக்கு அந்த உணர்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை. அதே தயாரிப்பாளரிடம் ‘என்னிடம் கார் இல்லை என்று சொல்லி எனக்கு ஒரு அம்பாசிடர் கார் வாங்கித் தர சொல்லியுள்ளார். அவர்கள் உதவியால் நான் அம்பாசிடார் கார் வாங்கினேன்.
பின்னர் அழகிய தமிழ்மகன் ஷூட்டிங்கின் போது அவரிடம் கார் சாவியைக் கொடுத்து ஓட்டித் தர சொன்னேன். அவரும் கடவுளை வணங்கிவிட்டு என்னை வைத்து அந்த மைதானத்தில் ஒரு ரவுண்டு அடித்தார். இப்போது கடைசியாக நான் அவரை சென்று பார்க்கவில்லை. நான் அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அதனால் அவரோடு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன்” எனக் கூறியுள்ளார்.